News April 23, 2025

இருட்டுக்கடை உரிமையாளர் மகள் மீண்டும் பரபரப்பு புகார்

image

தனது கணவர் பல்ராம் சிங் வெளிநாட்டுக்கு தப்ப வாய்ப்புள்ளதால் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்க வேண்டும் என இருட்டுக்கடை உரிமையாளர் மகள் கனிஷ்கா நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் மீண்டும் ஒரு புகார் அளித்துள்ளார். வரதட்சணையாக இருட்டுக்கடை உரிமத்தைக் கேட்பதாக ஏற்கனவே அளித்த புகார் மீதான விசாரணைக்கு ஆஜராக, பல்ராம் சிங் 10 நாள்கள் அவகாசம் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 23, 2025

பாக்.-ஐ செதில் செதிலாக தகர்க்கும் இந்தியா?

image

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானை ராணுவ ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் பழிவாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. *பாக். ராணுவம், லஷ்கர் – இ – தொய்பா முகாம்களில் தாக்குதல். *வர்த்தகத்தை முழுமையாக ரத்து செய்வது. *சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. *ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள P5 நாடுகளிடம் பாகிஸ்தான் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவது.

News April 23, 2025

அடுத்தடுத்து 5 விக்கெட்.. SRH கவலைக்கிடம்

image

MI-க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் SRH அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறி வருகிறது. முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த SRH அடுத்தடுத்த ஓவரில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷான், நிதிஷ் குமார் ரெட்டி, அனிகேத் வர்மா என நட்சத்திர வீரர்களின் விக்கெட்டை பறிகொடுத்தது. இதனால், அந்த அணி 8.3 ஓவரில் 35/5 ரன்களுடன் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறது.

News April 23, 2025

தீவிரவாதிகளின் தளபதியை சுற்றிவளைத்த ராணுவம்

image

J&K-வில் எண்கவுண்டர் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. குல்காமில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட TRF தீவிரவாத அமைப்பின் தளபதி ஆஷிஃப் ஃபவுஜி உள்பட அனைத்து தீவிரவாதிகளை ராணுவத்தினர் சுற்றி வளைத்துள்ளனர். ஆஷிஃப் நேரடியாக களத்தில் இறங்கி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!