News April 23, 2025
தருமபுரிக்கு பெருமை சேர்ந்த இளைஞர்

நாடு முழுவதும் நேற்று யுபிஎஸ்சி தேர்வு முடிகள் நேற்று வெளியான நிலையில், தமிழக அளவில் தருமபுரியை சேர்ந்த சிவசந்திரன் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். மாநில அளவில் முதலிடமும், தேசியளவில் 23-ம் இடத்தையும் பிடித்துள்ளார். 4 முறை யுபிஎஸ்சி தேர்வில் தோல்வி அடைந்த நிலையில், 5ஆவது முறையாக தேர்வு எழுதி சாதித்துள்ளார். தருமபுரிக்கு பெருமை சேர்த்த சிவசந்திரனை பற்றி மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News August 20, 2025
தருமபுரியில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள்

வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைபெறவுள்ள விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான முன்னேற்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சதீஸ் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். விழாவை அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
News August 20, 2025
தருமபுரியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தருமபுரியில் நாளை (ஆகஸ்ட் 21) நடைபெற உள்ளது. தருமபுரியில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபம், கடத்தூரில் உள்ள மீனாட்சி மஹால், பென்னாகரத்தில் உள்ள பிக்கிலி 4 சாலை திறந்தவெளி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தடங்கம், பாலக்கோடு விபிஆர்சி கட்டிடம் கமலாம் பட்டி மற்றும் அரூரில் உள்ள அண்ணமார் திருமண மண்டபம் ஆகிய ஆறு இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்பட உள்ளன. ஷேர்!
News August 20, 2025
தர்மபுரி: வக்கீல் இல்லாமல் கேஸ் போடலாம்

தர்மபுரி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04342-233781, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள். விபரங்களுக்கு <<17461682>>CLICK HERE<<>>