News April 23, 2025

விருதுநகரில் அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

image

விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 141 அங்கன்வாடி பணியாளர்கள், 115 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 – 24200, உதவியாளருக்கு ரூ.4100 -12500 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Similar News

News November 4, 2025

விருதுநகர்: இனி Gpay, Phonepe, paytm -க்கு குட்பை!

image

விருதுநகர் மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..

News November 4, 2025

அருப்புக்கோட்டையில் 24 சவரன் கொள்ளை; சிறை

image

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(40). இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றபோது அவரது வீடு புகுந்து மர்மநபர் 24 1/2 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கடையலுருட்டியை சேர்ந்த செல்வகுமாரை கைது செய்து நேற்று(அக்.3) சிறையில் அடைத்தனர்

News November 4, 2025

விருதுநகர்: இளைஞர் குத்திக் கொலை

image

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவிற்குட்பட்ட உவர்குளம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் மகன் செந்தாமரைக்கண்ணன்(34). இவரை அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் மகன் கர்ணா என்பவர் முன்விரோதம் காரணமாக நேற்று இரவு குத்திக் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!