News April 23, 2025
தூத்துக்குடி அங்கன்வாடியில் வேலை வாய்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 88 அங்கன்வாடி பணியாளர்கள், 44 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் செய்யப்பட உள்ளன. இதில் ஊதியமாக பணியாளருக்கு ரூ.7700 -24200, உதவியாளருக்கு ரூ.4100 -12500 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
Similar News
News April 23, 2025
தூத்துக்குடி: செம்மொழி தின பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி

செம்மொழி தினம் வரும் ஜூன் 3 கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட 11,12ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களிடையே செம்மொழி குறித்த பேச்சு & கட்டுரைப் போட்டிகள் ஜூன் 9 -ல் நடைபெற உள்ளது. விருப்பம் உள்ள மாணவர்கள் https://tamil valarchi.tn.gov.in இணைய தளத்தில் தலைமையாசிரியர் / முதல்வர் பரிந்துரையுடன் விண்ணப்பிக்கலாம். தகவலை மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
News April 23, 2025
மத்திய அரசுக்கு தூத்துக்குடி எம்பி கடிதம்

காலநிலை மாற்றத்தின் பல்வகை தாக்கங்களைக் கணக்கில் கொண்டு வெப்ப அலைக் கணக்கிடும் முறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். வெப்பநிலையையும் தாண்டி, அதிகரித்து வரும் காற்றின் ஈரப்பதம்(Humidity) உள்ளிட்ட இதர காரணிகளையும் கருத்தில் கொண்டு வெப்ப அலையை தீர்மானிக்க வேண்டும் என தூத்துக்குடியி எம்பி கனிமொழி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
News April 23, 2025
திருச்செந்தூர் கோவில் குறித்து நீதிமன்றம் உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றி கட்டுமான பணிகள் நடத்த வேண்டும் என ராம்குமார் ஆதித்தன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இது குறித்து விசாரணை நடத்திய நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து சுற்றுச்சூழல் துறை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கடலோர ஒழுங்காற்று குழும அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.