News April 23, 2025

புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை 30 நாட்களில் பெற்றுக்கொள்ளலாம் – ஆட்சியர்

image

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் உள்ள ஆதார் சேவை மையத்தில் விண்ணப்பித்து புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டையினை 30 தினங்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஆட்சியர் அழகுமீனா அதில் கேட்டுக்கொண்டுள்ளார். *ஷேர் பண்ணுங்க

Similar News

News April 23, 2025

ஒரே நாளில் 116 பேர் அதிரடி இடமாற்றம் எஸ் பி நடவடிக்கை

image

தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல், ஆரல்வாய்மொழி, சுசீந்திரம் ஆகிய பகுதிகளை தலைமையிடமாககொண்டு நெடுஞ்சாலை ரோந்து படை செயல்படுகிறது. காவல் நிலையம் நெடுஞ்சாலை ரோந்து ஆயுதப்படை என 69 போலீசார் நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோன்று மதுவிலக்கு பிரிவில் பணியாற்றும் போலீசார் 47 பேர் என நேற்று ஒரே நாளில் 116 போலீசாரை இடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டார்.

News April 23, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம்

image

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாம் 26 ஆம் தேதி காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நாகர்கோவில் பயோனியார் குமாரசாமி கல்லூரியில் நடைபெறுகிறது. 200க்கும் மேற்பட்டவர்கள் இதில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 25க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டு வேலை வாய்ப்பினை அளிக்க இருக்கிறார்கள். *உங்களது மாற்றுத்திறனாளி நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்*

News April 23, 2025

குமரியில் 93 மெட்ரிக் டன் நெல் விதைகள் விநியோகம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பு சாகுபடிப் பணிகள் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் நெல் விதைப்பு பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். மாவட்டத்தில் விவசாயிகளுக்கு முதல் பருவ கன்னிப்பூ சாகுபடிக்கு தேவையான நெல் விதைகள் 93 மெட்ரிக் டன் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் ஜென்கின் பிரபாகர் நேற்று கூறினார்.

error: Content is protected !!