News April 23, 2025

பேர்ணாம்பட்டு அருகே அண்ணனை கத்தியால் குத்திய தம்பி

image

பேரணாம்பட்டு கோட்டச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் திவித் (23). இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை. இவரது தம்பி சிபிராஜ் (21). திவித்திற்கு குழந்தைகள் இல்லாதது குறித்து அண்ணன், தம்பி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சிபிராஜ் தனது அண்ணன் திவித்தை கத்தியால் குத்தியுள்ளார். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 11, 2025

வேலூர் மாவட்ட பொது சுகாதார துறையில் வேலை

image

வேலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறையில் 22 காலிப் பணியிடங்கள் உள்ளன. செவிலியர், லேப் டெக்னீஷியன், சமூக சேவகர், பணியாளர், மருந்தாளர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. ரூ.23,000 வரை சம்பளம் வழங்கப்படும். 8, 10, 12, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் படித்தவர்கள் இன்றைக்குள் (ஆகஸ்ட் 11) இந்த <>இணையதளத்தில் <<>>விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு 0416 – 2252025 இந்த எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க

News August 11, 2025

வேலூர் மாவட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் கவனத்திற்கு…

image

வேலூா் அரசு அருங்காட்சியகத்தில் வரும் 17ஆம் தேதி மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. 1 – 3ஆம் வகுப்புக்கு சூரிய உதயம், 4 – 6ஆம் வகுப்புக்கு இயற்கை காட்சி, 7 – 9ஆம் வகுப்புக்கு தேசிய பெண் தலைவா்கள், 10 – +2 வகுப்புக்கு தேசிய ஆண் தலைவா்கள் ஆகிய தலைப்புகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. முன்பதிவுக்கு 76675-80831, 94438-85207 எண்களில் தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. பரிசுகளை அள்ளுங்க.

News August 11, 2025

வேலூர் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் பட்டியல்

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (ஆக.11) நள்ளிரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடவுள்ள காவலர்களின் பட்டியலை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்கு அவர்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவில் காவல்துறை உதவி தேவைப்படும் நபர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கோ, அல்லது 100-க்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

error: Content is protected !!