News April 23, 2025
VAO அலுவலகத்தில் பெண் உதவியாளர் தற்கொலை

அச்சரப்பாக்கம் கிராம உதவியாளராக பணியாற்றி வந்தவர் கீதா. கிராம நிர்வாக அலுவலரை சந்திக்க வரும் ஆண்கள் சிலர் மது போதையில் வருவதால், தன்னுடைய பணியை மேற்கொள்ள முடியாமல் கீதா தவித்துள்ளார். இதுதொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. அண்மையில் ஆய்வு மேற்கொண்ட வருவாய் கோட்டாட்சியர், கீதாவை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மனம் உடைந்த கீதா கதறி அழுததோடு, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News December 10, 2025
செங்கல்பட்டு: பள்ளி மாணவருக்கு வீட்டில் நடந்த சோகம்!

மாங்காடு அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்த வெளிநாட்டில் பணிபுரியும் பிரபுவின் மகன் கீர்த்தன் (9-ஆம் வகுப்பு), தன் தாயுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து அறைக்குச் சென்ற கீர்த்தன், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் தாய் சென்று பார்த்தபோது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாகக் கிடந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு, விசாரணை செய்கின்றனர்.
News December 10, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு நேற்று (டிச.9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News December 10, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

செங்கல்பட்டு நேற்று (டிச.9) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது


