News April 23, 2025
அப்பளம் அதிகம் சாப்பிட்டால் ஆபத்து!

வீட்டின் மாடியில் அரிசி வத்தல், ஜவ்வரிசி வத்தல் காயப்போடுவது வழக்கொழிந்துவிட்டது. அதற்கு மாற்றாக ரெடிமேட் அப்பளங்களே இப்போது வீட்டில் அதிகம் பொரிக்கப்படுகின்றன. இதனை அதிகம் உணவில் சேர்ப்பது ஆபத்து என்கின்றனர் டாக்டர்கள். காரணம் இதில் இருக்கும் சோடியம் பென்சோயேட். இது உயர் ரத்த அழுத்தம், இருதய நோய் வருவதற்கு வழிவகுக்குமாம். சோ, ரெடிமேட் அப்பளங்களை அளவாக பயன்படுத்துங்கள்.
Similar News
News August 24, 2025
ICU-வில் தமிழக மூத்த தலைவர்.. HEALTH UPDATE

CPI மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வெங்கடேஸ்வரா ஹாஸ்பிடல் அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 22-ம் தேதி வீட்டில், கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டதன் காரணமாக ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். தலையில் தையல் போடப்பட்டு ICU-வில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. 100 வயதானவர் என்பதால் நரம்பியல், நுரையீரல், இதய நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
News August 24, 2025
‘தலைவன் தலைவி’ ₹100 கோடி வசூல்

விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ படம் ₹100 கோடி வசூலித்துள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் B,C சென்டர்களில் அதிரிபுதிரியாக ஓடியது. இந்த நிலையில் வசூல் விவரத்தை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்துள்ளது. ‘ஏஸ்’ தோல்வியில் துவண்டிருந்த விஜய் சேதுபதிக்கு இப்படம் கம்பேக் ஆக அமைந்துள்ளது. ‘தலைவன் தலைவி’ உங்களுக்கு பிடித்ததா ?
News August 24, 2025
சட்டம் அறிவோம்: திடீரென போலீஸ் கைது செய்தால்..

வீட்டில் இருக்கும் ஒருவரை புகார் ஒன்றின் பேரில், திடீரென போலீஸ் கைது செய்யும் காட்சிகள் படங்களில் காட்டப்படும். ஆனால், CrPC 41, CrPC 41A பிரிவுகளின் படி, ஒருவரை கைது செய்ய போலீசாரிடம் பிடிவாரண்ட் இருக்க வேண்டியது அவசியமாகும். அதேபோல, பிடிவாரண்டுடன் கைது செய்யப்பட்டாலும், CrPC 21 சட்டத்தின் படி, கைது செய்யப்பட்ட நபர் உடனே ஜாமினுக்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT.