News April 23, 2025

வாரிசு என்று சொன்னாலே சிலருக்கு எரிகிறது: CM

image

வாரிசு என்று சொன்னாலே சிலருக்கு எரிகிறது என CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பி.டி.ராஜன் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், ‘பி.டி.ராஜனுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மட்டும் வாரிசு அல்ல, தானும் வாரிசுதான் என்றார். மேலும், இங்கே இருப்பவர்கள் எல்லோரும் திராவிட வாரிசுகள் எனத் தெரிவித்த அவர், சிலருக்கு எரியட்டும் என்பதற்காகவே வாரிசு என்பதை திரும்ப திரும்ப சொல்வதாகக் குறிப்பிட்டார்.

Similar News

News April 23, 2025

மத்திய அமைச்சரவை அவசரமாக கூடுகிறது

image

சவுதி பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து விட்டு PM டெல்லி திரும்பிய நிலையில், பகல் 12 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடுகிறது. PM இல்லத்தில் நடக்கும் இந்தக் கூட்டத்தில் காஷ்மீர் தாக்குதல் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது. மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். பயங்கரவாதத்தை அடியோடு ஒடுக்குவது குறித்து கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News April 23, 2025

காஷ்மீரில் கொல்லப்பட்ட 28 பேருக்கு CM ஸ்டாலின் இரங்கல்

image

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட 28 பேருக்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடியதும் CM ஸ்டாலின் இரங்கல் குறிப்பை வாசித்தார். அப்போது அவர், இந்த பயங்கரவாத தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது, பயங்கரவாதத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார். பின்னர் சட்டப்பேரவையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

News April 23, 2025

டாஸ்மாக் விவகாரம்: TN அரசின் மனு தள்ளுபடி

image

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடையில்லை என்று சென்னை HC உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனையை சட்டவிரோதம் என அறிவிக்கக்காேரி, TN அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் மனு தாக்கல் செய்தன. இதன்மீது HC உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்போது அந்த மனுக்களை தள்ளுபடி செய்ததுடன், அமலாக்கத் துறை தனது சோதனையை தொடரலாம் எனவும் HC தெரிவித்தது.

error: Content is protected !!