News April 22, 2025

19 ஆண்டுகளாக தூங்கும் சவுதி இளவரசர்!

image

சவுதி இளவரசர் அல்-வலீத் பின் காலித், 36 வயதை எட்டியுள்ளார். 19 ஆண்டுகளாக கோமாவில் இருப்பதால், அவர் ‘தூங்கும் இளவரசர்’ என்று அழைக்கப்படுகிறார். 2005-ல் நடந்த விபத்தில் மூளையில் காயம் ஏற்படவே, சுயநினைவை இழந்தார். வெண்டிலேட்டர் துணையுடன், டாக்டர்களின் முழுநேர கண்காணிப்பில் பராமரிக்கப்பட்டு வருகிறார். 2019-ல், அவரது கை விரல்களும், தலையும் லேசாக அசைந்தன. அதையடுத்து எந்த முன்னேற்றமும் இல்லை.

Similar News

News September 11, 2025

சாமியார்களும் அவர்களின் சொத்து மதிப்பும்

image

இந்தியாவில் ஆன்மிக குருக்களுக்கு எப்போதுமே மக்களிடம் பேராதரவு உண்டு. உலகின் மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் தான் அதிக ஆன்மிக குருக்கள் தோன்றியுள்ளனர். ஆன்மிக சொற்பொழிவில் தொடங்கி உலகளவில் ஆசிரமங்களை நிறுவியது முதல் அவர்களின் சாம்ராஜியங்கள் விரிவடைந்துள்ளன. அந்த வகையில், ஊடகங்களில் வெளியான தகவலின் படி, இந்திய சாமியார்களின் சொத்து மதிப்பை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

News September 11, 2025

உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு வருமா? இதை செக் பண்ணுங்க

image

உங்களுக்கு நீரிழிவு நோய் வரக்கூடிய வாய்ப்புள்ளதை பின்வரும் அறிகுறிகள் வெளிப்படுத்தும்: 1) அடிக்கடி தாகம் & தண்ணீர் குடித்தல் 2) நன்றாக தூங்கியும் எப்போதும் சோர்வாக உணர்வது 3) சிறு சிராப்புகள், காயங்கள் கூட மெதுவாக ஆறும் நிலை 4) பார்வை மங்குதல் (அ) மாற்றம் 5) பாதம் மரத்துப் போதல், அதனால் கூச்ச உணர்வு 6) திடீரென உடல்பருமன் அதிகரிப்பது (அ) எந்த மாற்றமும் செய்யாமலே உடல் எடை குறைதல். SHARE

News September 11, 2025

சற்றுமுன்: அடுத்த 1 மணி நேரத்திற்கு அலர்ட்

image

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று IMD அலர்ட் கொடுத்துள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, தேனி, தென்காசி, மதுரை, விருதுநகர், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!