News April 22, 2025
டாஸ்மாக் வழக்கில் நாளை தீர்ப்பு

ED சோதனையை சட்டவிரோதம் என்று அறிவிக்கக்கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பளிக்கவுள்ளது சென்னை ஐகோர்ட். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வு நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கவுள்ளது. மார்ச் 6-ஆம் தேதி டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சுமார் 60 மணி நேரம் ED சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 23, 2025
அட்ஜஸ்ட்மெண்ட்: நடிகைகளுக்குள் கருத்து மோதல்

பாலியல் அத்துமீறல் குறித்து மலையாள நடிகை மாலா பார்வதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல பெண்கள் சின்ன விஷயத்தை கூட பெரிதாக்குவதாகவும், அத்துமீறும் தொனியில் பேசுவர்களை கடந்து செல்லுங்கள் என்றும் அவர் கூறி இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை ரஞ்சனி, இதுபோன்ற விஷயங்களை எப்படி ஆதரிக்கிறீர்கள் என வினவினார். இந்த கருத்து உங்கள் குணத்தை காட்டுகிறது என்றும் காட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
News April 23, 2025
ஏப்ரல் 23: வரலாற்றில் இன்று

▶ உலக புத்தக நாள். ▶ 1639 – புனித ஜார்ஜ் கோட்டை ( தலைமைச் செயலகம்) சென்னை மாகாணத்தில் அமைக்கப்பட்டது. ▶ 1661 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் சார்லஸ் முடிசூடினார். ▶ 1938 – திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி பிறந்த நாள். ▶ 1977 – அமெரிக்க ரெஸ்லிங் வீரர் ஜான் சினா பிறந்த நாள். ▶ 1992 – இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே நினைவு நாள். 2005 – யூடியூப்பில் முதல் வீடியோ பதிவிடப்பட்டது.
News April 23, 2025
நட்பு நாடான இந்தியாவுக்கு ஆதரவு: அமெரிக்கா

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கர தாக்குதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பேட்டியளித்தபோது, இந்த சம்பவம் தொடர்பாக இந்திய PM மோடியுடன் அதிபர் ட்ரம்ப் பேசவிருப்பதாக தெரிவித்தார். நட்பு நாடான இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவு இருப்பதாகவும், இதுபோன்ற நிகழ்வுகள்தான் உலக அமைதிக்காக போராட வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.