News April 22, 2025

ஒருத்தரையும் விடமாட்டோம்: PM சூளுரை

image

J&K-வில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை பிரதமர் மோடி வன்மையாக கண்டித்துள்ளார். தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள அனைவரும் கண்டிப்பாக நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும், அவர்களின் தீய எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது எனவும் பிரதமர் கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தீர்க்கமான நடவடிக்கையை மேலும் வலிமைபடுத்துவோம் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Similar News

News December 8, 2025

PAK-ஐ கூடுதலாக அடித்திருக்க முடியும்: ராஜ்நாத் சிங்

image

ஆபரேஷன் சிந்தூரின் போது, பாகிஸ்தானுக்கு இன்னும் கூடுதலான இழப்புகளை நம்மால் ஏற்படுத்தி இருக்க முடியும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆனால் நமது படைகள் பொறுமையுடன் செயல்பட்டு, தேவையான இழப்புகளை மட்டும் ஏற்படுத்தின. இந்த வெற்றிக்கு ராணுவம், நிர்வாகம், எல்லைப்புற மக்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகளே காரணம். இந்த பன்மைத்துவம் தான் உலகில் நம்மை தனித்துவமாக காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 8, 2025

₹500 கோடி கொடுத்தால் CM தான் ஆக முடியுமா?

image

₹500 கோடி கொடுத்தால் பஞ்சாப் CM ஆக முடியும் என அம்மாநில காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து கூறியுள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. யாரும் உங்களிடம் பணம் கேட்கமாட்டார்கள். ஆனால், பணம் கொடுப்பவர்கள் தான் CM வேட்பாளராக அறிவிக்கப்படுவர். தனது கணவரை CM வேட்பாளராக அறிவிக்கவில்லை என்றால், அவர் அரசியலில் கவனம் செலுத்தமாட்டார் என்றும் கவுர் தெரிவித்துள்ளார்.

News December 8, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶டிசம்பர் 8, கார்த்திகை 22 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 1.45 PM – 2.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9.15 AM – 10:15 AM & 7.30 PM – 8.30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்

error: Content is protected !!