News April 22, 2025

ஒருத்தரையும் விடமாட்டோம்: PM சூளுரை

image

J&K-வில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை பிரதமர் மோடி வன்மையாக கண்டித்துள்ளார். தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள அனைவரும் கண்டிப்பாக நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும், அவர்களின் தீய எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது எனவும் பிரதமர் கூறியுள்ளார். மேலும், தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் தீர்க்கமான நடவடிக்கையை மேலும் வலிமைபடுத்துவோம் எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

Similar News

News September 11, 2025

டென்னிஸ் லெஜண்டை நாட்டில் இருந்து வெளியேற்ற அழுத்தம்

image

24 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற டென்னிஸ் லெஜண்ட் ஜோகோவிச், செர்பியாவில் இருந்து வெளியேற அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. செர்பியாவில் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இந்த போராட்டத்தை ஜோகோவிச் ஆதரித்ததால், நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனால், கிரீஸ் நாட்டிற்கு அவர் தனது குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார்.

News September 11, 2025

நடிகை ஹன்சிகாவுக்கு அதிர்ச்சி

image

<<15081057>>குடும்ப வன்முறை வழக்கில்<<>>, பிரபல நடிகை ஹன்சிகாவின் மனுவை மும்பை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ஹன்சிகாவின் சகோதரரின் மனைவியான முஸ்கான், தன் கணவன், மாமியாருடன் நாத்தனார் ஹன்சிகாவும் சேர்ந்து மனரீதியாக கொடுமைப் படுத்தியதாக புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யும்படி ஹன்சிகா அளித்த மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட், ஹன்சிகா மற்றும் தாயார் ஜோதி இருவருக்கும் முன்ஜாமின் மட்டும் வழங்கியது.

News September 11, 2025

“Man of Steel” அல்ல “Man of Steal”: ஸ்டாலினை சாடிய தமிழிசை

image

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய CM, ஸ்டாலின் என்ற பெயருக்கு “Man of Steel”(இரும்பு மனிதன்) என்று பொருள் என தெரிவித்திருந்தார். ஆனால் நீங்கள் “Man of Steel” என்று சொல்வதை தமிழ்நாட்டு மக்கள்”Man of Steal”(திருட்டு மனிதன்) என்றுதான் எடுத்துக் கொள்வார்கள் என தமிழிசை விமர்சித்துள்ளார். மேலும் திமுக ஆட்சியில் பல துறைகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது எனவும் குற்றம்சாட்டினார்.

error: Content is protected !!