News April 22, 2025
புனித யாத்திரைக்கு முன்னதாக பயங்கர சதித்திட்டம்!

J&k-ல் இன்று நடந்த தீவிரவாத தாக்குதல், முன்கூட்டியே நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல் என தெரியவந்துள்ளது. வரும் ஜூலை 3-ம் தேதி தொடங்க உள்ள அமர்நாத் யாத்திரையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பகுதிக்கு அருகே உள்ள பைஸ்ரீன் பள்ளத்தாக்கில் நுழைந்த தீவிரவாதிகள், அங்கு கூடியிருந்த சுற்றுலா பயணிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். அமைச்சர் அமித்ஷா அப்பகுதிக்கு விரைந்துள்ளார்.
Similar News
News October 18, 2025
BREAKING: அறிவித்தார் விஜய்

கரூர் துயரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு தலா ₹20 லட்சம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டதாக விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்திக்க சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும், அது கிடைத்ததும் நிச்சயமாக சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உறவுகளை இழந்தவர்களுக்கு எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.
News October 18, 2025
Sports Roundup: வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை

*சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில், இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. *இஸ்தான்புல்லில் நடந்த சர்வதேச வாள்வீச்சு தொடரில் பவானி தேவி வெள்ளி வென்றார். உலக ஜூனியர் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் தான்வி சர்மா முன்னேற்றம். *ஆசிய மகளிர் 7’S ரக்பி சீரிஸில், இந்தியா 0-43 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானிடம் படுதோல்வி.
News October 18, 2025
பிறந்த குழந்தையை எப்போது தூளியில் போடணும்?

பிறந்த குழந்தையை தூங்க வைக்க காலங்காலமாக நாம் பயன்படுத்துவது தூளிதான். ஆனால், இதில் சில விஷயங்களை கவனிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். குழந்தை பிறந்து 2 வாரங்களுக்கு பின்பே தூளியில் போடவேண்டுமாம். மேலும், குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு பிறகு தூளி பயன்படுத்துவதை குறைப்பது நல்லதாம். குழந்தையை சீக்கிரம் தூங்க வைக்க தூளியை வேகமாக ஆட்டக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர். SHARE.