News April 22, 2025
பெரம்பலூர்: கலெக்டர் முக்கிய அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலத்தில், கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஏ.30ஆம் தேதி நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இயந்திரங்கள், மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ளலாமென கலெக்டர் அறிவித்துள்ளார்.
Similar News
News December 8, 2025
பெரம்பலுர்: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News December 8, 2025
பெரம்பலூர்: கள்ளச்சாராயம் காய்ச்சல்-ஒருவர் கைது

பெரம்பலூர் மாவட்டம், புது நடுவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளனூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் தனது வயலில் கள்ளசாராயம் காய்ச்சுவதற்காக பேரலில் 30 லிட்டர் கள்ளச்சாராயத்தை ஊறல் போட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதனை அப்பகுதியில் ரோந்து சென்ற பெரம்பலூர் ஊரக காவல் துறையினர் கண்டறிந்து ராஜேந்திரனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News December 8, 2025
பெரம்பலூர்: மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் பெரம்பலூர் நகரைச் சேர்ந்த மணிகண்டன் (30), ரஞ்சன்குடி ராதாகிருஷ்ணன் (22) ஆகியோர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளனர். அப்பொழுது வீட்டின் அருகே உள்ள மின் கம்பி உரசியதில் இருவரும் கடும் பாதிப்படைந்தனர். இருவரையும் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது மணிகண்டன் செல்லும் வழியிலே உயிரிழந்தார். இது குறித்து மங்களமேடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


