News April 22, 2025
ஈரோடு: ஆடுக்கு ரூ.6,000, மாடுக்கு ரூ.37,000!

நாய் கடித்து இறக்கும் ஆடுகளுக்கு ரூ.6,000, கோழிக்கு ரூ.200, மாட்டிற்கு ரூ.37,500 இழப்பீடு வழங்க அரசு அறிவித்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2024 செப்., முதல் கடந்த ஜன., வரை நாய் கடித்து இறந்த ஆடுகளுக்கு ரூ.6,000 இழப்பீடு வழங்கும் பணி துவங்கியது. மக்களே, உங்களது கால்நடைகள் நாய் கடித்து இறந்தால், உடனே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து பதிவு செய்தால் தான் இழப்பீடு கிடைக்கும் (SHARE பண்ணுங்க)
Similar News
News November 8, 2025
ஈரோடு: வங்கியில் வேலை! விண்ணப்பிக்கவும்

ஈரோடு மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். (SHARE)
News November 8, 2025
FLASH: ஈரோட்டில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை

ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லூரியில் பேராசிரியைக்கு கல்லூரி முதல்வர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாள்களாக கல்லூரி மாணவிகள், பேராசிரியைகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
News November 8, 2025
ஈரோடு: ரூ.7,500 வெகுமதி.. மக்களே உஷார்!

ஈரோடு மக்களே, வங்கிகளின் அசல் லோகோவை பயன்படுத்தி ரூ.7,500 வெகுமதி தருவதாக கூறி, பலரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணுக்கு ஒரு ‘லிங்க்’ வருவதாக புகார் எழுந்துள்ளது. அது மோசடி செய்யும் நோக்குடன் சைபர் குற்றவாளிகளால் அனுப்பப்படும் ‘லிங்க்’ ஆகும். விவரம் தெரியாத பலரும் இதனால் ஏமாற்றப்படலாம். அந்த லிங்கை கிளிக் செய்தல் பணம் பறிபோகலாம். எனவே, உஷாரா இருங்க. இதுபோன்ற லிங்கை நம்பி ஏமாற வேண்டாம். SHARE பண்ணுங்க!


