News April 22, 2025

சாக்கடை கால்வாயில் விழுந்த நபர் உயிரிழப்பு

image

திருப்பூரில் லட்சுமி நகர் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில், ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக வடக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் மது போதையில் சென்ற நபர் தவறி சாக்கடை கால்வாயில் விழுந்து உயிரிழந்து தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News August 20, 2025

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

image

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஆக.21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, அவிநாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஒடக்காடு, பங்களா ஸ்டாப், குமரன் வீதி, மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், சாமுண்டிபுரம், லட்சுமி தியேட்டர், முருகம்பாளையம், கல்லம்பாளையம், சாமிநாதபுரம், ஜீவா காலனி, அங்கேரிபாளையம் ரோடு, கஞ்சம்பாளையம், சின்ன பொம்மநாயக்கன்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

News August 20, 2025

திருப்பூர்: திருமணத் தடையா? இங்க போங்க!

image

திருப்பூர் மாவட்டம் கடத்தூரில் உள்ளது, புகழ்பெற்ற அர்ச்சுனேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்திற்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளதாம். அமராவதி நதிக்கரையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் வழிபட்டால், திருமணத் தடை நீங்கும் எனப் புராணம் சொல்கிறது. ஆம், குலோத்துங்க சோழன் மகளின் மாங்கல்ய தோஷத்தை தீர்த்து வைத்த தலம் இது என நம்பப்படுகிறது. திருமணத் தடை உள்ள உங்கள் நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க!

News August 20, 2025

திருப்பூரில் நாளை மின் ரத்து

image

திருப்பூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை(ஆக.21) நடைபெறுவதால் அவினாசி ரோடு, புஷ்பா தியேட்டர், காலேஜ் ரோடு, ஒடக்காடு, பங்களா ஸ்டாப், காவிரி வீதி, ஸ்டேன்ஸ் வீதி, ஹவுசிங் யூனிட், முத்துச்சாமி வீதி, கே.ஆர்.இ. லே-அவுட், எஸ்.ஆர். நகர் வடக்கு, நேதாஜி வீதி, குமரன் வீதி, உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!