News April 22, 2025
ஒரு வேலையும் செய்யாத நிறுவனத்திற்கு ₹1,000 கோடி!

தொடங்கி 2 மாதங்களே ஆன, எந்தவித செயல்பாடுகளும் இல்லாத URSA Clusters என்ற நிறுவனத்திற்கு, ஆந்திர அரசு ₹1,000 கோடி மதிப்புள்ள 59.6 ஏக்கர் நிலத்தை சொற்பமான தொகைக்கு ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த அந்த நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ₹10 லட்சமாக இருக்கிறது. ஆனால், ₹5,728 கோடி முதலீடு செய்யும் என ஆந்திர அரசு எப்படி கூறுகிறது என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.
Similar News
News April 23, 2025
ஏப்ரல் 23: வரலாற்றில் இன்று

▶ உலக புத்தக நாள். ▶ 1639 – புனித ஜார்ஜ் கோட்டை ( தலைமைச் செயலகம்) சென்னை மாகாணத்தில் அமைக்கப்பட்டது. ▶ 1661 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் சார்லஸ் முடிசூடினார். ▶ 1938 – திரைப்படப் பின்னணிப் பாடகி எஸ். ஜானகி பிறந்த நாள். ▶ 1977 – அமெரிக்க ரெஸ்லிங் வீரர் ஜான் சினா பிறந்த நாள். ▶ 1992 – இந்தியத் திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே நினைவு நாள். 2005 – யூடியூப்பில் முதல் வீடியோ பதிவிடப்பட்டது.
News April 23, 2025
நட்பு நாடான இந்தியாவுக்கு ஆதரவு: அமெரிக்கா

காஷ்மீரில் நடைபெற்ற பயங்கர தாக்குதல் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் பேட்டியளித்தபோது, இந்த சம்பவம் தொடர்பாக இந்திய PM மோடியுடன் அதிபர் ட்ரம்ப் பேசவிருப்பதாக தெரிவித்தார். நட்பு நாடான இந்தியாவிற்கு அமெரிக்காவின் ஆதரவு இருப்பதாகவும், இதுபோன்ற நிகழ்வுகள்தான் உலக அமைதிக்காக போராட வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
News April 23, 2025
பயங்கரவாத தாக்குதல்: மத்திய அரசை வலியுறுத்திய TTV

ஜம்மு – காஷ்மீர் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்ட அவர், பஹல்காம் தாக்குதல் வேதனை அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.