News April 22, 2025
ஜேசிபி ஓட்டுநர்களுக்கு ஓர் நற்செய்தி!

சிவகங்கை மாவட்ட வேளாண்மைப் பொறியியல் துறையின் கீழ், ஜே.சி.பி இயந்திரங்களை இயக்குவதற்கு தகுதியுடைய திறன் பெற்ற விருப்பமுள்ள ஓட்டுநர்கள், சிவகங்கை மற்றும் காரைக்குடியிலுள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவகத்தினை 9080230845 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 20, 2025
சிவகங்கை: மழை வெள்ளம் பாதிப்புகள்.. புகார் எண்கள்!

சிவகங்கையில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News October 20, 2025
திருப்புவனம் நகரில் நீர் புகும் அச்சம்

திருப்புவனம்: நகரை ஒட்டிய நீர் வரத்து கால்வாய்களில் மணல் திருட்டு அதிகரித்ததால் கரைகள் பலவீனமடைந்துள்ளன. வடகிழக்கு மழையால் வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்படவுள்ள நிலையில், பிரமனூர் கால்வாய் வழியாக அதிவேகமாக நீர் பாயும் அபாயம் நிலவுகிறது. இதனால் வண்டல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் நீர் நகரில் புகும் அச்சம் எழுந்துள்ளது. மணல் திருட்டை தடுத்து கரைகள் சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
News October 19, 2025
சிவகங்கை: தீபாவளிக்கு காவல்துறை அறிவுறுத்தல்

சிவகங்கை மாவட்ட காவல் துறை அறிவுறுத்தலில், தீபாவளி கொண்டாட்டத்தில் பாதுகாப்பை பின்பற்றுங்கள், அதிக ஒலி பட்டாசுகளை தவிர்க்கவும், குழந்தைகள் பெரியவர்களுடன் மட்டுமே வெடிக்கவும், மின் வயர்கள் இல்லாத இடங்களில் வெடிக்கவும், அரசு அனுமதித்த நேரத்தில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவும். பாதுகாப்பாக தீபாவளி கொண்டாடுங்கள் எனவும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.