News April 22, 2025
விருதுநகர்:அரசு போக்குவரத்து கழக புகார் எண் அறிவிப்பு

அரசு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்கு புகார் எண்ணை போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ளது. பயணிகளை ஓட்டுநர், நடத்துநர்கள் ஏற்ற மறுப்பது, நிறுத்தத்தில் நிற்காமல் செல்வது, தாமதமாக பேருந்து வருவது, சில்லறை பிரச்சனை, தவறான நடத்தை போன்ற புகார்களை *1800 599 1500* இந்த கட்டணமில்லா இலவச நம்பரில் தொடர்பு கொண்டு பயணிகள் தெரிவிக்கலாம் என அரசுபோக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE!
Similar News
News November 4, 2025
விருதுநகர்: இனி Gpay, Phonepe, paytm -க்கு குட்பை!

விருதுநகர் மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..
News November 4, 2025
அருப்புக்கோட்டையில் 24 சவரன் கொள்ளை; சிறை

அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்(40). இவர் கடந்த செப்டம்பர் மாதம் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றபோது அவரது வீடு புகுந்து மர்மநபர் 24 1/2 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றனர். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கடையலுருட்டியை சேர்ந்த செல்வகுமாரை கைது செய்து நேற்று(அக்.3) சிறையில் அடைத்தனர்
News November 4, 2025
விருதுநகர்: இளைஞர் குத்திக் கொலை

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகாவிற்குட்பட்ட உவர்குளம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவர் மகன் செந்தாமரைக்கண்ணன்(34). இவரை அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் மகன் கர்ணா என்பவர் முன்விரோதம் காரணமாக நேற்று இரவு குத்திக் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து நரிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


