News April 22, 2025
இனி குழந்தைகளும் வங்கி கணக்கு தொடங்கலாம்!

பள்ளி மாணவ, மாணவிகள் வங்கிக் கணக்கு தொடங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் ஸ்காலர்ஷிப், கல்விக்கான மானியம் அவர்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள், தாமாகவே வங்கிக் கணக்கு தொடங்க ரிசர்வ் வங்கி அனுமதியளித்துள்ளது. இதன் மூலம் இனி அவர்கள் சேமிப்பு, டெபாசிட் கணக்குகளை தொடங்கி, இயக்கவும் முடியும்.
Similar News
News April 22, 2025
பிராமணர்கள் மீதான அவதூறு.. அனுராக் காஷ்யப் மன்னிப்பு

‘புலே’ பட விவகாரத்தில், பிராமணர்கள் குறித்து அனுராக் காஷ்யப் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை உருவாக்கின. இதுதொடர்பாக மன்னிப்பு கோரிய அனுராக் தற்போது மீண்டும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். கோபத்தில், ஒருவருக்கு பதிலளிக்கும் போது என் கண்ணியத்தை மறந்துவிட்டதாகவும், முழு பிராமண சமூகத்தைப் பற்றியும் மோசமாகப் பேசிவிட்டதற்கு வருந்துவதாகவும் கூறியுள்ளார்.
News April 22, 2025
ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் கைது

வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, ஜக்கையன் தலைமையில் ஆதித்தமிழர் கட்சியினர், பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய ஆதித்தமிழர் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதற்கிடையில் PM மோடியின் புகைப்படத்தை எரித்ததால், போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக கைது செய்தனர்.
News April 22, 2025
BREAKING: யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

2024-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி (UPSC) தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட 1,132 காலிப் பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலை, மெயின்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஜன.7 முதல் ஏப்.9 வரை நேர்காணல் நடைபெற்றது. அதில், தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் <