News April 22, 2025
மீனவர்கள் படகு மீது மோதிய சரக்கு கப்பல்!

கன்னியாகுமரியின் முட்டம் அருகே தனியார் மீன்பிடி துறைமுகத்தில் படகு மீது கப்பல் மோதியது. கடியப்பட்டணத்தைச் சேர்ந்த அருள் ரமேஷ் என்பவரின் விசைப்படகில் 21 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். சுமார் 22 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது பெரிய சரக்கு கப்பல் ஒன்று படகு மீது மோதியது. நல்வாய்ப்பாக மீனவர்கள் காயமின்றி உயிர் தப்பிய நிலையில், மீன் பிடிக்காமல் கரைக்கு திரும்பியுள்ளனர்.
Similar News
News November 1, 2025
ரவிவர்மன் ஓவியமே ஐஸ்வர்யா ராய்

அழகின் உருவமான ஐஸ்வர்யா ராய், ஜீன்ஸ் திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். உலக அழகி பட்டம் வென்ற நடிகையாக வலம் வந்த ஐஸ்வர்யாவின் கண்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. 50 வயதை கடந்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவரது சமீபத்திய போட்டோஸ், ரசிகர்களை மெய்மறக்க செய்கிறது. உங்களுக்கு பிடிச்சிருந்தா, ஒரு லைக் போடுங்க.
News November 1, 2025
பிரபல நடிகருக்கு நிச்சயதார்த்தம் ❤️❤️PHOTO

அல்லு அர்ஜுனின் தம்பியும் நடிகருமான அல்லு சிரிஷ், நீண்ட கால காதலி நைனிகாவை நிச்சயதார்த்தம் செய்துள்ளார். ஹைதராபாத்தில் நடைபெற்ற விழாவில், சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், குடும்பத்தினர் மத்தியில் மோதிரம் மாற்றிக் கொண்ட போட்டோக்கள் SM-ல் வைரலாகி வருகின்றன. தமிழில் கவுரவம் படத்தில் ஹீரோவாக நடித்த அல்லு சிரிஷ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.
News November 1, 2025
தெருநாய்கள் விவகாரம்: தமிழக அரசு பதில் மனு

தெரு நாய்கள் விவகாரம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இதில், TN-ல் 138 கால்நடை மருத்துவமனைகள் மூலம் நாய்களுக்கு கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 4.77 லட்சம் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக கூறியுள்ள அரசு, மாநகராட்சிகளில் மட்டும் 91 கருத்தடை மையங்கள் செயல்படுவதாக குறிப்பிட்டுள்ளது.


