News April 22, 2025
அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.. வெளியான புது தகவல்

மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு DA உயர்த்தி அறிவித்த பின்னர் மாநில அரசுகளும் உயர்த்துவது வழக்கம். 2% DA உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வரும் <<16165541>>மே மாதம்<<>> அரியருடன் வழங்கப்படவுள்ளது. மத்திய அரசைத் தொடர்ந்து ஒடிசா, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களும் DA-வை உயர்த்தியுள்ளன. ஆனால், TN அரசு இதுவரை அறிவிக்கவில்லை. 2026 தேர்தலை மனதில் வைத்து 3% அல்லது அதற்கு மேல் உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News April 22, 2025
தங்கம் போல் உயரும் எலுமிச்சை: கிலோ ₹150

தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், இளநீர், எலுமிச்சை என பழச்சாறுகளின் விற்பனை அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள் பெரும்பாலும் தாகம் தணிக்க நம்புவது எலுமிச்சை ஜூஸ்தான். இந்தச் சூழலில், ஒரு கிலோ எலுமிச்சை விலை ₹150 ரூபாயாக விற்பனையாகிறது. நேற்று ஒரு கிலோ ₹120க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ₹30 ரூபாய் அதிகரித்துள்ளது. இதனால், சாமான்ய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
News April 22, 2025
டெல்லியில் தமிழர்கள் வீடுகளை அகற்ற கடும் எதிர்ப்பு!

டெல்லி ஜன்புரா பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கும் வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மெட்ரோ, சாலை மேம்பாட்டிற்காக ‘மதராஸி’ குடியிருப்புகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டது. வாழ்வாதாரம், பிள்ளைகளின் படிப்பு உள்ளிட்டவை பாதிக்கப்படும் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
News April 22, 2025
பாவேந்தருக்காக தமிழ் வார விழா: CM ஸ்டாலின்

பாவேந்தர் பிறந்த நாளையொட்டி ஏப். 29 – மே 5 வரை ‘தமிழ் வார விழா’ கொண்டாடப்படும் என CM ஸ்டாலின் அறிவித்தார். பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட அவர், தமிழ் மொழியையும், பாவேந்தரையும் கொண்டாடும் வகையில் இவ்விழா நடத்தப்படுவதாக தெரிவித்தார். மாவட்டங்களில் கவியரங்கங்கள், கருத்தரங்குகள் நடத்தி, சிறந்த படைப்புகளுக்கு பாரதிதாசன் இளம் படைப்பாளர் விருது வழங்கப்படும் என்றும் கூறினார்.