News April 22, 2025

தம்பியை கத்தியால் குத்திய அண்ணன் கைது

image

குலசேகரன் புதூரைச் சேர்ந்தவர் சுடலையாண்டி. இவருடைய அண்ணன் இசக்கியப்பன். இவர்கள் இடையே சொத்து தொடர்பாக பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் தம்பியிடம் வீட்டை எனக்கு எழுதித்தருமாறு அவரது அண்ணன் கேட்டு கேட்டுள்ளார். இதில் ஏற்பட்ட தகராறில் இசக்கியப்பன் சுடலையாண்டியை கத்தியால் குத்தினார். இது தொடர்பாக சுசீந்திரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து இசக்கியப்பனை கைது செய்தனர்

Similar News

News September 17, 2025

குமரி: 50% மானியத்தில் வாங்க மிஸ் பண்ணாதீங்க!

image

குமரி மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? அப்போ தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தஞ்சை மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க தொடர்புக்கு:04652-278404. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க!

News September 17, 2025

குமரி: விளையட்டு விபரீதமானது; இளைஞர் உயிரிழப்பு

image

கொல்லங்கோடு பகுதி பட்டதாரி ஜெய்சங்கரன்(23)  அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்தார். இவர் நேற்று (செப்.16) வீடியோ காலில் செல்போனில் காதலியுடன் பேசிக்கொண்டிருக்கும்போது தகராறு ஏற்பட்டதால், காதலியை மிரட்டுவதற்காக விளையாட்டாக போர்வையால் தூக்கில் தொங்கி உள்ளார். விளையாட்டு விபரீதமாகி ஜெய்சங்கரன்  கழுத்தில் போர்வை இறுகியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுக்குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை.

News September 17, 2025

நாகர்கோவிலில் வேலைவாய்ப்பு முகாம்

image

குமரி ஆட்சியர் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில் நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நாகர்கோவில் கோணத்தில் செப்.19 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளதாக ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!