News April 22, 2025
எம்.சாண்ட், கிரஷர் ஜல்லி ரூ.1,000 உயர்வு

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எம்.சாண்ட், கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருந்தனர். இதுகுறித்து அமைச்சர் துரைமுருகனுடன் நேற்று அச்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், விலையை அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து, இன்று முதல் (ஏப்.22) எம்.சாண்ட், பி.சாண்ட், கிரஷர் ஜல்லி விலையை ₹1,000 அதிகரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 20, 2026
பனையூரில் தவெக தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை

பரபரப்பான 2026 தேர்தல் களத்துக்கு மத்தியில், தவெகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஆலோசனையில் ஈடுபடுகிறது. இதற்காக பனையூர் அலுவலகத்திற்கு புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் உள்பட பலரும் வருவதால் அந்த இடமே பரபரப்புடன் காணப்படுகிறது. 12 பேர் கொண்ட இக்குழு பல்துறை நிபுணர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்டு தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் என விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.
News January 20, 2026
₹44,900 சம்பளம்.. +2 போதும்: APPLY HERE

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள பப்ளிசிட்டி இன்ஸ்பெக்டர், ஜூனியர் மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 311 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: +2, டிப்ளமோ, Law. வயது வரம்பு: 18 – 35. சம்பளம்: ₹19,900 – ₹44,900. இதற்கான விண்ணப்பம் ஜன.29-ல் முடிவடைகிறது. மேலும் தகவல் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News January 20, 2026
மகளிர் உரிமைத் தொகை.. பேரவையில் HAPPY அறிவிப்பு

2021-ல் தொடங்கிய CM ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் கடைசி சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில், மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் 1 கோடியே 30 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஏற்கெனவே மகளிர் உரிமைத் தொகை ₹2,000 வரை உயர்த்தப்படலாம் என தகவல்கள் வரும் நிலையில், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பேரவையில் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


