News April 21, 2025
தமிழ்ப் புத்தாண்டு: 5 ராசியினருக்கு எச்சரிக்கை

தமிழ் புத்தாண்டில், 5 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க ஜோதிட நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கன்னி ராசியினருக்கு குடும்பம், பணியிட சூழ்நிலைகளில் சாதகமற்ற பலன்கள் கிடைக்கும். துலாம் ராசியினருக்கு கணவன்- மனைவி உறவில் சிக்கல் ஏற்படும். தனுசு ராசியினருக்கு பல மாற்றங்கள் ஏற்படும். மகர ராசியினருக்கு வீடு, நில பிரச்னைகள் உருவாகும். கும்ப ராசியினர் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும்.
Similar News
News August 16, 2025
BREAKING: ஐ.பெரியசாமி வீட்டில் ED ரெய்டு

அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அதிகாலையில் இருந்து ED அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான புகாரில், சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரின் இல்லம், MLA விடுதி, திண்டுக்கலில் உள்ள இல்லம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மேலும், அமைச்சர் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் ED விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.
News August 16, 2025
கிருஷ்ணரை வழிபட சிறந்த நேரம் எது?

இன்று கிருஷ்ணரின் பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் விரதமிருந்து நாள் முழுவதும் கிருஷ்ணரை வழிபடுவார்கள். பஞ்சாங்க கணிப்பின் படி, ஆகஸ்ட் 16 அதிகாலை 1:41 முதல் இரவு 11:13 வரை அஷ்டமி திதி நீடிக்கிறது. சனிக்கிழமை என்பதால் காலை 10:30 முதல் 11:50 வரை கிருஷ்ணரை வழிபட சிறந்த நேரமாக குறிப்பிடப்படுகிறது. மேலும், மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் பூஜைகளை செய்து வழிபடவும் உகந்த நேரமாகும்.
News August 16, 2025
EPS-க்கு எதிராக அணிதிரளும் அதிமுக சீனியர்கள்

அன்வர் ராஜா, மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தனர். இது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் செங்கோட்டையன், தம்பிதுரை, செல்லூர் ராஜு என பல மூத்த தலைவர்கள் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இபிஎஸ் உரிய மரியாதை அளிக்காததே அவர்களது புகாராக உள்ளதாகவும், விரைவில் அவர்கள் இபிஎஸ்-க்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.