News April 21, 2025
தேர்தல் ஆணையத்தின் சிஸ்டம் சரியில்லை: ராகுல்

இந்திய தேர்தல் ஆணையம் சமரச அமைப்பாகிவிட்டது என ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், பாஸ்டன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் சிஸ்டத்தில் மிகப் பெரிய தவறு இருப்பதாக குற்றம்சாட்டினார். அமெரிக்காவுடன், இந்தியாவுக்கு நட்புறவு நீடிக்கிறது என்றும் தெரிவித்தார்.
Similar News
News April 25, 2025
தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்?

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சர்ச்சை பேச்சால் பொன்முடிக்கும், நீதிமன்ற கெடுவால் செந்தில் பாலாஜிக்கும் நெருக்கடி நிலவுவதால், அவர்கள் அமைச்சர் பதவியிலிருந்து விடுவிக்கப்படலாம் எனவும், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு மின்சாரத்துறை வழங்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் சில மூத்த அமைச்சர்களும் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
News April 25, 2025
தீவிரவாதம் – பயங்கரவாதம் என்ன வித்தியாசம்?

ஒரு கொள்கையின் அடிப்படையில் சமூக மற்றும் அரசியல் குறிக்கோள்களுடன் வன்முறையில் ஈடுபடுபவர்களை தீவிரவாதிகள் என்பர். ஒரு நாட்டின் இறையாண்மை, பொருளாதாரத்தை கெடுக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகள் என்பர். அதோடு அப்பாவி மக்களின் உயிர், உடைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனத் தெரிந்தே அவர்கள் செயல்படுவார்கள். இரண்டும் வன்முறை செயல்களே என்ற போதிலும், நோக்கத்தில் வித்தியாசங்கள் உள்ளன.
News April 25, 2025
விண்ணப்பித்த 3 நாளில் புதிய மின்சார இணைப்பு: அரசு

உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த 3 நாள்களில் புதிய மின்சார இணைப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்பு வழங்குவதில் EB-க்கு தனிவிதிமுறைகள் உள்ளதாகவும், அதன்படிதான் மின்சார இணைப்பு வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 27 லட்சம் மின்சார இணைப்புகள் வழங்கி தமிழகம் சாதனை படைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.