News April 21, 2025

பழனியில் கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது!

image

பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவலர்கள் தீவிர ரோந்து & கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக்ராஜா(25), சிவக்குமார்(23), மாரிசாமி(21), அருண்குமார்(37), ஜேம்ஸ்(27), நாகேந்திரன்(27) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் இடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News October 14, 2025

திண்டுக்கல்: தவெக நிர்வாகிக்கு ஜாமீன்!

image

திண்டுக்கல்: தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல்குமார், முதலமைச்சர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குறித்த சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். 3 நீதிமன்ற நீதிபதி ஆனந்தி அக்டோபர் 24 வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இன்று(அக்.14) நிர்மல்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

News October 14, 2025

திண்டுக்கல் :ஊராட்சி செயலாளர் பணி அட்டவணை வெளியீடு

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகள் இளைஞர்கள் கவனத்திற்கு தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வேலைவாய்ப்பில் ஊராட்சி செயலாளர்கள் பணியிடத்திற்கான மாவட்ட வாரியாக காலி பணியிடங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள வகுப்புவாரியான பணியிட இட ஒதுக்கீடுகளை தமிழ்நாடு அரசு அட்டவணை வெளியிட்டுள்ளது.

News October 14, 2025

நத்தம்: கோயிலில் அம்மன் நகை திருட்டு!

image

நத்தம்: கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோயிலில் தினமும் காலை, மாலை  நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மாலை வழக்கம்போல் கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. இந்நிலையில், மறுநாள் காலை கோவிலை திறந்த போது செண்பகவல்லி அம்மன் கழுத்தில் இருந்த தாலி திருடு போயிருந்தது. இது குறித்த புகாரில் நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!