News April 21, 2025
கரூரில் வெப்பத்தால் பற்றி எரிந்ததா கார்?

கரூர்: புகழூர் மூலிமங்கலம் பிரிவு அருகே நேற்று மெக்கானிக் தனசேகர் காரை ஓட்டி வந்தபோது, கார் மளமளவெனத் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அனணத்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் ஏற்படவில்லை. கரூரில் வெயில் சதம் அடித்து வரும்நிலையில் அடிக்கடி பேட்டரி வாகனங்கள், கார் ஆகியவை தீ பற்றி எரிவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News December 26, 2025
வெள்ளியணையில் சோகம்; மனைவி முன்னே கணவர் பலி

கரூர் மாவட்டம் வெள்ளியணை சாலையில், சிவசாமி அவரது மனைவி லட்சுமி என்பவர் உடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் சரண்யா ஓட்டி வந்த கார் சிவசாமி வாகனத்தின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே சிவசாமி பலியானார். அதிர்ஷ்டவசமாக லட்சுமி உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து லட்சுமி புகார் கொடுத்ததின் அடிப்படையில் வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News December 26, 2025
வெள்ளியணையில் சோகம்; மனைவி முன்னே கணவர் பலி

கரூர் மாவட்டம் வெள்ளியணை சாலையில், சிவசாமி அவரது மனைவி லட்சுமி என்பவர் உடன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் சரண்யா ஓட்டி வந்த கார் சிவசாமி வாகனத்தின் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே சிவசாமி பலியானார். அதிர்ஷ்டவசமாக லட்சுமி உயிர் தப்பினார். இச்சம்பவம் குறித்து லட்சுமி புகார் கொடுத்ததின் அடிப்படையில் வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News December 26, 2025
கடவூர் அருகே சூதாடிய மூன்று பேர்: அதிரடி கைது

கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சிந்தாமணிபட்டி குளம் அருகே முள்ளுக்காட்டில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். சிந்தாமணிப்பட்டி போலீசார் நடவடிக்கை எடுத்து, மோகன்ராஜ் (36), முனியப்பன் (41), ராஜ்குமார் (31) ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 51 சீட்டுக்கட்டுகள் மற்றும் ரூ. 650 பறிமுதல் செய்யப்பட்டது.


