News April 21, 2025

பூசாரி கொலை – கொத்தனார் கைது!

image

புதுச்சேரி, தவளகுப்பத்தில் கோயில் பூசாரி சுந்தர் என்பவர் மீது தலையில் குழவி கல்லை போட்டு கொலை செய்ததாக, கொத்தனாரான தமிழரசனை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் போலீசாரின் விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை செய்த‌தாக தமிழரசன் வாக்குமூலம் அளித்துள்ளார் என கூறப்படுகிறது. அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து, வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 4, 2025

பாகூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

image

பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேற்று சென்ற கலெக்டர் குலோத்துங்கன், டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் வருகை குறித்தும், போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளதா என ஆய்வு செய்து, பொது மக்களிடம் மருத்துவ சேவை குறித்தும் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, பாகூரில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி அரசு மேல் நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்தில் பணிக்கு வந்தார்களா, என ஆய்வு செய்தார்.

News November 4, 2025

புதுவை: சமூக ஆர்வலர்க்கு கொலை மிரட்டல்

image

புதுவை உப்பளம் பகுதியைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் கோகுல் காந்திநாத். இவர் நேற்று முன்தினம் கொக்கு பார்க் அருகே தண்ணீர் குழாயில், தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கே இறைச்சி கழிவுகள் கிடந்துள்ளது. உடனே அருகில், இருந்த இறைச்சி கடையில் இருந்த ஒருவரிடம் இது குறித்து கேட்டுள்ளார். ஆனால் அந்த நபர், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, டி.நகர் காவல் நிலையத்தில் கோகுல் புகார் அளித்துள்ளார்.

News November 4, 2025

புதுவை: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

image

ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள 2623 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: 10th, 12th, ITI, Diploma, Degree, B.E/B.Tech
3. கடைசி தேதி : 06.11.2025
4. சம்பளம்: ரூ.8,200 – ரூ.12,300
5. வயது வரம்பு: 18 – 24 (SC/ST – 29, OBC – 27)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க

error: Content is protected !!