News April 21, 2025

நாமக்கல்லில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

image

வெண்ணந்தூர் அருகே கடந்த 7-ம் தேதி 1,610 கிலோ ரேஷன் அரிசியுடன் கைதான சேலத்தை சேர்ந்த கோபால் (49) மற்றும் பள்ளிப்பாளையம் அருகே கத்தி காட்டி மிரட்டிய வழக்கில் கைதான சசிகுமார் (30) ஆகிய இருரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்தநிலையில் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News

News January 11, 2026

நாமக்கல்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

image

நாமக்கல் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை”<<>> செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 11, 2026

நாமக்கல்: பொங்கல் பரிசு முக்கிய தகவல்!

image

நாமக்கல் மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 11, 2026

நாமக்கல்: மழையால் மின்தடையா? CALL பண்ணுங்க

image

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 11) காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் தெருவிலோ திடீரென மின்தடை ஏற்பட்டால், பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை. உடனடியாக தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TNEB) பிரத்யேக நுகர்வோர் சேவை எண்ணான 94987-94987 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். இதன் பின்னர் மின்சாரம் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!