News April 21, 2025
நாமக்கல்லில் இருவர் குண்டர் சட்டத்தில் கைது

வெண்ணந்தூர் அருகே கடந்த 7-ம் தேதி 1,610 கிலோ ரேஷன் அரிசியுடன் கைதான சேலத்தை சேர்ந்த கோபால் (49) மற்றும் பள்ளிப்பாளையம் அருகே கத்தி காட்டி மிரட்டிய வழக்கில் கைதான சசிகுமார் (30) ஆகிய இருரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இந்தநிலையில் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Similar News
News April 21, 2025
நாமக்கல்லில் 25-ம் தேதி இலவச பயிற்சி!

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி வளாகத்தில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் (கேவிகே) வருகிற 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை, காலை 10 மணிக்கு ‘நன்னீர் மீன் வளர்ப்பு’ என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள 04286-266345, 266650, 7358594841 என்ற தொலைபேசி எண்களை தொடர்கொள்ளலாம். இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News April 21, 2025
நம்பிக்கை தரும் நாமக்கல் காலபைரவர்

நாமக்கல் மாவட்டம் அடுத்த அணியாபுரத்தில் அமைந்துள்ளது காலபைரவர் கோயில். மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாக வீற்றிருக்கும் கால பைரவரை வணங்கினால், கடன் பிரச்சனைகள் நீங்குமாம். அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கி வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது நம்பிக்கை. கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News April 21, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ் பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்களின் விவரம் நாமக்கல் – கோமதி (94981 67158), ராசிபுரம் அம்பிகா (9498106528), திருச்செங்கோடு -சிவக்குமார் (9498176695), வேலூர்- சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.