News April 21, 2025
பார்சிலோனா ஓபன்.. பட்டம் வென்றார் டென்மார்க் வீரர்!

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். ஃபைனலில் ஸ்பெயின் வீரர் அல்காரஸை அவர் எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற ஆட்டத்தில், 7-6, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று ஹோல்ஜர் ரூனே வாகை சூடினார். 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.
Similar News
News August 9, 2025
லிங்க வடிவில் காட்சி தரும் அம்மன்!

அருவுருவமான லிங்க வடிவிலான அம்மன் கோவை, கொழுமம் மாரியம்மன் கோவிலில் காட்சி தருகிறார். அமராவதி ஆற்றில், ஒருவருக்கு மீண்டும் மீண்டும் லிங்க வடிவிலான கல் ஒன்று சிக்கியுள்ளது. அவரது கனவில் தோன்றிய அம்பாள், ‘லிங்க வடிவில் தரிசனம் தந்தது நானே’ எனக் கூற, அங்கேயே கோவில் கட்டி, மாரியம்மன் என பெயர் சூட்டி, ஊர் மக்கள் வழிபட தொடங்கினர். இங்கு, இரண்டரை அடி உயரத்தில் லிங்க வடிவில் மாரியம்மன் காட்சி தருகிறாள்.
News August 9, 2025
மினுமினுக்கும் உடையில் ‘அனேகன்’ ஹீரோயின்

இன்ஸ்டாவில் படு ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை அமைரா தஸ்தூர் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மினுமினுக்கும் உடையில் காந்தக் கண்களைக் கொண்டு அவர் பார்க்கும் பார்வைக்கு, ரசிகர்கள் லைக்ஸ் மாரி பொழிந்து வருகின்றனர். ‘அனேகன்’ படத்தின் மூலம் அமைரா தமிழிழ் அறிமுகமானார். அதையடுத்து பிரபுதேவா உடன் ‘பஹீரா’ படத்தில் நடித்தார். தற்போது ஹிந்தியில் கவனம் செலுத்துகிறார்.
News August 9, 2025
வங்கிக் கணக்கு தொடர்பாக RBI புதிய உத்தரவு

உயிரிழந்த வாடிக்கையாளரின் வங்கி கணக்குகளை செட்டில் செய்வது தொடர்பாக, வங்கிகளுக்கு RBI புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. உயிரிழந்த வாடிக்கையாளரின் டிபாசிட், லாக்கரில் உள்ள பொருள்களை கேட்டு குடும்பத்தினர் (அ) நாமினிகள் விண்ணப்பிப்பது வழக்கம். அந்த விண்ணப்பங்களை 15 நாள்களுக்குள் பரிசீலித்து உரியவர்களுக்கு வழங்க வேண்டும். தாமதமாகும் நாள்களுக்கு 4% ஆண்டு வட்டியை கணக்கிட்டு வழங்க வேண்டும் என கூறியுள்ளது.