News April 20, 2025

ஈரோடு: ஓய்வூதியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு, நலவாரியங்களில் பதிவு பெற்ற 60வயது நிறைவடைந்த 11,000 மேற்பட்டோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் ஆயுள் சான்றை, உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 2025-26-ஆம் ஆண்டுக்காக ஆண்டு ஆயுள் சான்றை இந்த <>லிங்க்<<>> மூலம், உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.

Similar News

News July 6, 2025

ஈரோடு அனைத்து ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

image

ஈரோடு மாவட்டத்தில் 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான சிறப்பு கிராம சபை கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டம் ஈரோட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முறையாக நடைபெறும் எனவும், சபை நடைபெறும் இடம், நேரம் ஆகியவற்றை அதற்கு சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி அலுவலர்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

News July 6, 2025

VAO லஞ்சம் கேட்டால்! உடனே CALL பண்ணுங்க

image

ஈரோடு மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் 0424-2210898 என்ற எண் மூலம் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News July 6, 2025

ஈரோடு அரசு அலுவலர் பெண்ணிடம் சில்மிஷம்

image

ஈரோடு அரசு மருத்துவமனையில் 20 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கழிவறைக்கு சென்ற போது, போதையில் பூந்துறையை சேர்ந்த ஈரோடு மாநகராட்சி அலுவலக உதவியாளராக பணிபுரியும் ரியாஸ்(28) என்பவர், பின் தொடர்ந்து சென்று அப்பெண்ணிடம் திடீரென சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து கவனித்து மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தனர். இதனால் மருத்துவமனையில் பெண்களின் பாதுகாப்பு கேள்வி குறியானது.

error: Content is protected !!