News April 20, 2025
இத்தாலியில் கைதிகளுக்கான பாலியல் அறை திறப்பு!

இத்தாலியில் கைதிகள் தங்களது துணையுடன் உடலுறவில் ஈடுபட பாலியல் அறை திறக்கப்பட்டுள்ளது. மத்திய உம்பிரியாவை சேர்ந்த கைதி ஒருவர் தனது காதலியை தனிமையில் சந்திக்க அனுமதி கோரி கோர்ட்டை நாடினார். இதனை விசாரித்த கோர்ட் சிறைக் கைதிகள் தங்களது வாழ்க்கை துணை (அ) நீண்டகால காதலர்களை 2 மணி நேரம் தனிமையில் சந்திக்க அனுமதித்துள்ளது. ஏற்கனவே பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்வீடன், ஸ்பெயின் நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது.
Similar News
News September 10, 2025
கவலையாலேயே பழனியில் மொட்டை போட்டேன்: ARM

‘மதராஸி’ படம் வெற்றி பெற வேண்டியே பழனியில் மொட்டையடித்ததாக AR முருகதாஸ் தெரிவித்துள்ளார். முன்பு எனது முதல் படமான ‘தீனா’ வெற்றி பெற பிரார்த்தித்ததாக கூறிய அவர், இப்படமும் தனது முதல் படம் போன்று தான் என்றார். ஏனென்றால், கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு நான் எழுதிய 2 படங்களை என்னால் எடுக்க முடியவில்லை என வருத்தமடைந்தார். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார், சிக்கந்தர் ஆகியவை தோல்வியை சந்தித்தன.
News September 10, 2025
சோஷியல் மீடியாக்களை தடை செய்த நாடுகள் பட்டியல்

சமூக வலைதளங்களை தடை செய்ததற்கு எதிரான போராட்டம், அதிபர், பிரதமர் ஆகியோர் பதவி விலக காரணமாக இருந்ததை நேபாளத்தில் நாம் பார்த்துள்ளோம். இந்நிலையில், இதுபோன்ற தடைகள் இதற்கு முன்பும் சில நாடுகளில் கொண்டு வரப்பட்டுள்ளன. அவற்றில் சில நாடுகளில் தடை இன்னும் அமலிலே உள்ளது. அப்படிப்பட்ட நாடுகள் எவை, எதற்காக தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து மேலே உள்ள படங்களில் பார்க்கலாம்.
News September 10, 2025
டைம் ஓவர்.. அன்புமணி மீது பாயவுள்ள நடவடிக்கை?

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவின் குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி விளக்கமளிக்க, ராமதாஸ் விதித்த கெடு இன்றோடு நிறைவடைகிறது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கெடுவில் அன்புமணி விளக்கமளிக்கவில்லை. தற்போது, மீண்டும் கெடு வழங்கியும் அதை அன்புமணி கண்டுகொள்ளாமல் இருப்பதால் ராமதாஸ் உச்சக்கட்ட டென்ஷனில் இருக்கிறாராம். இதனால், அவர் மீது தற்காலிக பொறுப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.