News April 20, 2025

விழுப்புரம்: கடன் தொல்லை நீங்கி செழிப்பாக வேண்டுமா?

image

செல்வத்திற்கு அதிபதி லட்சுமி. அதைக் காப்பவர் குபேரன். இவ்விருவரும் அருள்பாலிக்கும் மகாலட்சுமி குபேரர் கோவில், விழுப்புரம் அருகே திருநகரில் அமைந்துள்ளது. மிகவும் சக்திவாய்ந்த இந்த கோவிலில் பௌர்ணமி, அமாவாசையில் மகாலட்சுமி மற்றும் குபேரனுக்கு பூஜை செய்தால் போதும், உங்கள் வாழ்வில் கடன் நீங்கி செல்வம் செழித்தோங்கும் என்பது ஐதீகம். *நண்பர்களுக்கும் கடனை தீர்க்கும் லட்சுமி குபேரரை தெரியப்படுத்துங்கள்*

Similar News

News April 20, 2025

இது இல்லைனா அபராதம் தான்

image

விழுப்புரம் மாவட்டத்தில் வரும் மே. 15 ஆம் தேதிக்குள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை அமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தியுள்ளார். அதன் பின்னர் தமிழ் பெயர் பலகை வைக்காத நிறுவனங்கள், கடைகள் ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அபராதம் விதித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News April 20, 2025

விழுப்புரம் மாவட்ட வட்டாட்சியர் எண்களை தெரிஞ்சிக்கோங்க

image

திருவெண்ணெய்நல்லூர்-04153-290893, கண்டாச்சிபுரம்-04153-231666, மேல்மலையனூர்-9942248808, 04145-234209, மரக்காணம்-9445461915, 04147-239449, விக்கிரவாண்டி-9445461837, 04146-233132, வட்டாட்சியர், வானூர்-9445000526, 0413-2677391, விழுப்புரம்-9445000525, 04146-222554, செஞ்சி-9445000524, 04145-222007, திண்டிவனம்-9445000523, 04147-222090. *

News April 20, 2025

விழுப்புரம் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

image

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் சீயப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் அருணா தம்பதியரின் மூத்த மகள் திலகவதி திருவண்ணாமலை கம்பன் கல்லூரியில் பி காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து, தகவல் கிடைத்த மேல்மலையனூர் போலீசார் சடலத்தைப் பெற்று செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!