News April 20, 2025
பாலியல் தொல்லை: கொத்தனார் கைது

சிவகங்கை அம்மச்சிபட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி செந்தில்குமார் 45. செந்தில்குமார் கொத்தனார் வேலை பார்க்கிறார்.அண்மையில் அவர் கட்டட வேலை பார்த்த பகுதியில், அருகிலுள்ள வீட்டில் இருந்த 5-ம் வகுப்பு சிறுமியிடம் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். மாணவி பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்துள்ளார்போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் செந்தில்குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
Similar News
News August 9, 2025
சிவகங்கை: அரசு வேலை.. ரூ.68,000 வரை சம்பளம்!

சிவகங்கை இளைஞர்களே, தமிழக சுற்றுசூழல் துறையில் புராஜக்ட் அசோசியேட், கணக்கு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி, தட்டச்சு என பணிக்கேற்ற தகுதியுடையோர்<
News August 9, 2025
சிவகங்கை: அஜித்குமார் வழக்கு CBI திடுக் தகவல்..!

மடப்புரம் அஜித் உயிரிழந்த வழக்கில், கார் சாவியை நீண்ட நேரம் கழித்து தன்னிடம் கொடுத்ததாக நிகிதா கூறியிருந்தார். மேலும் காரை வடகரை வரை அஜித்தும், அவர் நண்பரும் ஓட்டி வந்ததாக கூறப்பட்டது. இதில், சிபிஐ அதிகாரிகள் வடகரையில் விசாரணையை தொடங்கினர். CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், நிகிதா தான் காரை ஓட்டி வந்ததும், பார்க்கிங்கை விட்டு கார் வெளியே செல்லவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
News August 8, 2025
ஆக.11 போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி

தமிழகம் முழுவதும் 11.8.2025 அன்று முதலமைச்சர் காணொலி காட்சியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நிகழ்வு நடக்க இருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், சுய உதவிக்குழுக்கள், இளைஞர் மன்றங்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள அழைப்பு.