News April 20, 2025
ரிசர்வ் வங்கி கையிருப்பில் அதிகரிக்கும் தங்கம்!

ஏப்.11 அன்றுடன் முடிந்த வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு மதிப்பு ₹11,986 கோடி அளவு அதிகரித்துள்ளது. இதனால் கையிருப்பில் உள்ள மொத்த தங்கத்தின் மதிப்பு ₹6,88,496 கோடியாக உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி(RBI) தெரிவித்துள்ளது. அமெரிக்கா – சீனா இடையேயான வரிப்போர், சர்வதேச வர்த்தக பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. இதனால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Similar News
News November 3, 2025
திருப்பத்தூர்: ஏலகிரி மலை சென்றவருக்கு நேர்ந்த சோகம்

சென்னையை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஷாஹித் என்பவர் நேற்று (நவ.02) காரில் குடும்பத்துடன் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றார். இந்த நிலையில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை ரயில்வே மேம்பாலம் மீது சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த நால்வரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
News November 3, 2025
Cinema Roundup: தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே

*ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடி ஆகிறார் பூஜா ஹெக்டே. *கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘நாயகன்’ ரீ-ரிலீசாகிறது. *நவ.14-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ‘டியூட்’ ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. *கிஷென் தாஸின் ‘ஆரோமலே’ படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளது. *’பராசக்தி’ முதல் சிங்கிள் இந்த வாரம் வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் குமார் அறிவிப்பு. *விக்ரம் 63-ல் மீனாட்சி செளத்ரி நடிக்கவுள்ளார்.
News November 3, 2025
கஷ்டங்களை தீர்க்கும் சோமவார பிரதோஷம்!

திங்கட்கிழமை பிரதோஷம் மிக சிறப்பான பலன்களை தரும். சிவனின் படத்திற்கு தீபம் ஏற்றி, விரதத்தை தொடங்க வேண்டும். மாலை 4:30- 6 மணிக்குள், ஒரு தட்டில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் 12 நெல்லிக்கனி தீபத்தை வட்ட வடிவில் ஏற்ற வேண்டும். பிறகு ‘ஓம் நமசிவாய’ என 54 முறை சொல்லி, சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யணும். விரதமிருக்க விரும்புபவர்கள் பால், பழம், பழச்சாறு மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். SHARE IT.


