News April 20, 2025
ரிசர்வ் வங்கி கையிருப்பில் அதிகரிக்கும் தங்கம்!

ஏப்.11 அன்றுடன் முடிந்த வாரத்தில் தங்கத்தின் கையிருப்பு மதிப்பு ₹11,986 கோடி அளவு அதிகரித்துள்ளது. இதனால் கையிருப்பில் உள்ள மொத்த தங்கத்தின் மதிப்பு ₹6,88,496 கோடியாக உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி(RBI) தெரிவித்துள்ளது. அமெரிக்கா – சீனா இடையேயான வரிப்போர், சர்வதேச வர்த்தக பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. இதனால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Similar News
News January 23, 2026
தினமும் ஷாம்பு பயன்படுத்தி குளிக்கலாமா?

*எண்ணெய் பசை முடி உள்ளவர்கள் தினமும் ஷாம்பு பயன்படுத்தலாம். *வறண்ட மற்றும் சுருள் முடி உள்ளவர்கள் தினமும் ஷாம்பு பயன்படுத்தினால் முடி உலர்ந்து, சேதமடைய வாய்ப்புள்ளது. *அவர்கள் வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்துவது நல்லது. *அதிகமாக ஷாம்பு பயன்படுத்தினால் முடியின் இயற்கையான எண்ணெயை நீக்கி, வறட்சி, உடைதல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும். *தினமும் ஷாம்பு பயன்படுத்துவது அனைவருக்கும் நல்லதல்ல.
News January 23, 2026
900 இந்தியர்களை விடுவிக்கும் UAE

900-க்கும் இந்தியர்களை UAE விடுதலை செய்ய உள்ளது. இதற்காக கைது செய்யப்பட்டோரின் பட்டியலை அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்திடம் ஒப்படைத்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் 2-ல் UAE தேசிய தின கொண்டாட்டத்தின்போது, நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து பல கைதிகள் விடுவிக்க உத்தரவிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்தியர்கள் விடுவிக்கப்பட உள்ளனர். இது இரு நாடுகளின் நல்லுறவை பிரதிபலிக்கிறது.
News January 23, 2026
உலகின் பழமையான குகை ஓவியம் கண்டுபிடிப்பு!

உலகின் பழமையான குகை ஓவியத்தை இந்தோனேசியாவின் கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடித்துள்ளனர். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்ட ஆய்வில், ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்களை கண்டுபிடித்தனர். இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


