News April 20, 2025

விழுப்புரம் கல்லூரி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

image

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் சீயப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த முருகன் அருணா தம்பதியரின் மூத்த மகள் திலகவதி திருவண்ணாமலை கம்பன் கல்லூரியில் பி காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து, தகவல் கிடைத்த மேல்மலையனூர் போலீசார் சடலத்தைப் பெற்று செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News September 22, 2025

விழுப்புரம்: அச்சுறுத்தும் கஞ்சா – அதிரடி கைது

image

விழுப்புரம் மாவட்டம் வெள்ளிமேடு பேட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்தி வந்த 5 இளைஞர்களை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5.5 கிலோ கஞ்சா, செல்போன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News September 22, 2025

விழுப்புரம்: பெண்கள் பாதுகாப்புக்கான எண்கள்

image

வீடு, அலுவலகம், பொது இடம் என அனைத்து இடங்களிலும் பெண்கள் & குழந்தைகளின் பாதுகாப்பு கேள்வி குறியே, எனவே, பெண் மீதான வன்கொடுமை-181, ராகிங்-155222, பெண்கள்&குழந்தைகள் மிஸ்ஸிங்-1094, குழந்தைகள் பாதுகாப்பு-1098, மனஉளைச்சல் -9911599100, தேசிய பெண்கள் ஆணையம்-01126944754, 26942369, தமிழ்நாடு பெண்கள் ஆணையம்-044 28592750 என்ற எண்களை சேவ் பண்ணுவது அவசியமானதாகும். தெரிந்த பெண்களுக்கு பகிரவும்.

News September 22, 2025

விழுப்புரம்: B.E முடித்திருந்தால் மத்திய அரசு வேலை!

image

விழுப்புரம் மக்களே! மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் செயல்படும் BEML நிறுவனத்தில் ஜூனியர் நிர்வாகி பணிக்கு 119 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், உலோகவியல், கணினி அறிவியல், IT-ல் பொறியியல் முடித்திருக்க வேண்டும். ஆரம்ப கால சம்பளமாக ரூ.35,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த<> லிங்க்<<>> மூலம் செப்.,26க்குள் விண்ணப்பிக்கலாம். SC/ST பிரிவினருக்கு கட்டண விலக்கு உண்டு. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!