News April 19, 2025
வேலூர்: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஏப்ரல் 25 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணி அளவில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ஐந்தாவது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
வேலூர் மக்களுக்கு முக்கிய தகவல்

வேலூரில், பேருந்து நிலையங்கள், ஓட்டல்களில் உணவு பொருட்களை MRP விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். கூடுதல் விலைக்கு விற்பது, காலாவதியான தேதியை மாற்றுவது, அதன்மேல் வேறு ஸ்டிக்கரை ஒட்டுவது போன்றவற்றை கண்டால் FSSAI-க்கு 94440 42322 என்ற வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம். அல்லது சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350673>>தொடர்ச்சி<<>>
News August 9, 2025
வேலூர் மக்களுக்கு முக்கிய தகவல்

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அல்லது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ, புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது, கடையின் முழுமையான முகவரி உள்ளிட்ட ஆதாரங்களோடு புகார் செய்யும்போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.
News August 9, 2025
வேலூரில் மாரத்தான் போட்டி

காட்பாடி அருகே உள்ள சித்தூரில் இன்று (ஆகஸ்ட் 9) மாரத்தான் போட்டி நடைபெற்றது. போதைப்பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த மரத்தான் போட்டியில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் போட்டியாளராக பங்கேற்று ஓடினார். சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலூர் நேதாஜி மைதானம் வரை போட்டி நடைபெற்றது. சிறுவர், சிறுமிகள், பெரியவர்கள் என பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.