News April 19, 2025
கடலுக்குள் மூழ்கும் முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்

முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் நாட்டின் மிகப்பெரிய அலையாத்தி காடுகளுள் ஒன்றாகும். சுமார் 120 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த அலையாத்தி காடு, புயல், கடல் அரிப்பு, சுனாமி போன்ற பேரிடர்களில் இருந்து மக்களை காத்து வருகிறது. இந்நிலையில், சமீபத்திய ஆய்வு ஒன்றில் உயரும் கடல் மட்டம் காரணமாக 2100-க்குள் முத்துப்பேட்டையில் 2,382 ஹெக்டேர் அலையாத்தி காடுகள் நீரில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 30, 2025
மதுபான கடைகளை மூட உத்தரவு

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை fl1/fl2/fl3/fl3A/fl3AA மற்றும் fl11 உரிமம் பெற்ற கடைகள் மற்றும் மது கூடங்கள் வியாழக்கிழமை மே தினத்தை முன்னிட்டு விற்பனை இல்லாத நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. எனவே, திருவாரூர் மாவட்டத்தில் செயல்படும் மதுக்கடைகள் மற்றும் மது கூடங்கள் 01.05.2025 அன்று தற்காலிகமாக மூடுவதற்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
News April 29, 2025
மன்னார்குடி பாஜக நிர்வாகிக்கு ஜாமீன்

மன்னார்குடியை சேர்ந்த லெனின் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் புகைப்படம் பதிவிட்டதற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து இன்று விடுதலை செய்யப்பட்ட அவருக்கு பாஜக நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
News April 29, 2025
திருவாரூர் மாவட்டத்தின் வரலாறு

திருவாரூர் மாவட்டத்தின் பயோடேட்டா குறித்து உங்களுக்கு தெரியுமா? திருவாரூர் மாவட்டம் கடந்த 1997-இல் தஞ்சை மற்றும் நாகை மாவட்டங்களிலிருந்து பிரித்து கலைஞரால் தனிமாவட்டமாக உருவாக்கப்பட்டது. 9 தாலுகா, 10 ஊராட்சி ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 573 வருவாய் கிராமங்கள் என பரந்து விரிந்த நிர்வாக அமைப்பை திருவாரூர் மாவட்டம் கொண்டுள்ளது. உங்களுக்கு தெரிந்த இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE செய்யவும் !