News April 19, 2025
கிண்டியில் மூலிகை சோப்பு பயிற்சி

கிண்டியில் உள்ள வேளாண் பல்கலையின் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் வரும் 25ம் தேதி, மூலிகை சோப்பு தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அதில், பஞ்ச காவ்யா, ஆரஞ்சு, வாழைப்பழம் மிக்சிங், ரோஸ், சந்தனம், ஆவாரம்பூ, கற்றாழை, அதிமதுரம், பீட்ரூட் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி மூலிகை சோப் தயாரிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும் விபரங்களுக்கு, 044 29530048 என்ற எண்ணை அழைக்கலாம். *நண்பர்களுக்கு பகிரவும்*
Similar News
News August 8, 2025
அரசு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்கள்

பாலவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் புதிதாக கூடுதல் கட்டிடத்தை அமைச்சர் மா.சுபிரமணியன் மற்றும் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர்கள் திறந்து வைத்தனர். இந்நிகழ்வின் போது சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த்ரமேஷ், துறையின் செயலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு பங்கேற்றனர்.
News August 8, 2025
சென்னையில் EB கட்டணம் அதிகமா வருதா?

சமீபத்தில் சென்னையில் வசிக்கும் ஒருவருக்கு ரூ.91,000 மின் கட்டணம் வந்தது அனைவரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். ஷேர் பண்ணுங்க
News August 8, 2025
மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார் முதல்வர்

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், மாநில கல்விக்கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8) வெளியிட்டார். மாநில கல்விக்கொள்கை குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் கடந்த 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு குழு அமைத்தது. குழுவின் அறிக்கை கடந்த ஜூலை மாதம் முதலமைச்சரிடம் சமர்ப்பித்த நிலையில், இன்று கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டார்.