News April 19, 2025

காயல்பட்டினம் திரவ பிரியாணி தெரியுமா?

image

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் காயல்பட்டினத்தில் பகல், இரவு வேலைகளில் கிடைக்கும் ஒரு வகை திரவ உணவு கறி கஞ்சி. இதனை திரவ பிரியாணி என்றும் அழைக்கிறார்கள். மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த கறி கஞ்சி அரிசி காய்கறி பாசிப்பயிறு இறைச்சி துண்டு, மஞ்சள் இஞ்சி போன்றவைகளால் தயாரிக்கப்படுகிறது. இந்த கறிக்கஞ்சியை ஒரு முறை சுவைத்து பார்த்தால், பின் காயல்பட்டினம் சென்றால் இதனை ருசிக்காமல் இருக்க மாட்டீர்கள்.

Similar News

News October 14, 2025

தூத்துக்குடியில் 47 கிலோ புகையிலை பறிமுதல்

image

தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டபத்திற்கு உட்பட்ட சுரேஷ் ஐஏஎஸ் அகாடமி அருகாமையில் உள்ள தனிநபரின் வீட்டில் நேற்று (13.10.2025, திங்கட்கிழமை) தடை விதிக்கப்பட்ட புகையிலை 47 கிலோ பதுக்கிவைத்திருந்ததாக தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களால் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மத்திய பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவை மத்திய காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

News October 14, 2025

தூத்துக்குடி ஊராட்சி வேலை.. APPLY செய்வது எப்படி?

image

தூத்துக்குடி கிராம ஊராட்சி செயலர் பணிக்கு 32 காலியிடங்கள் உள்ளன. கல்வி தகுதி : 10th. கடைசி தேதி- நவ.9. முதலில் <>www.tnrd.tn.gov.in<<>> என்ற தளத்தில் APPLYஐ கிளிக் செய்து பெயர் உள்ளிட்ட விவரங்கள், கல்வி சான்று, வகுப்பு சான்று, புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றை பதிவேற்றி சமர்ப்பிக்க வேண்டும். பிறகு விண்ணப்ப கட்டணம் ரூ.100 செலுத்தி விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். சொந்தஊரில் அரசு வேலை உடனே SHARE பண்ணுங்க

News October 14, 2025

தூத்துக்குடி காட்டுப்பகுதியில் மீனவர் குத்திக் கொலை

image

தூத்துக்குடி தாளமுத்து நகர் துரைசிங் நகரை சேர்ந்தவர் சூர்யா (மீனவர்). நேற்று இவர் வெள்ளைப்பட்டியில் உள்ள காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதாக தாளமுத்து நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து இவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், இந்த கொலை தொடர்பாக மூன்று பேரை தேடி வருகின்றனர்.

error: Content is protected !!