News April 19, 2025

கலைஞர் காப்பீட்டு திட்ட மருத்துவ அட்டை வழங்கும் முகாம்

image

கலைஞர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காப்பீட்டு அட்டை வழங்கும் முகாம் வருகின்ற 23, 24, 25, 26 ஆகிய 4 நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னிமலை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் கார்டு கொண்டு வந்து மருத்துவ காப்பீட்டு அட்டை பெற்று பயன்பெறுமாறு பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக் அறிவித்துள்ளார்

Similar News

News December 25, 2025

ஈரோடு வாக்காளர்களே சூப்பர் UPDATE!

image

ஈரோடு மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

News December 25, 2025

ஈரோடு: 8 ஆம் வகுப்பு படித்திருந்தால் அரசு வேலை!

image

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.19,500 முதல் 62,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க மற்றும் மேலும் விவரங்களுக்கு https://www.tnsec.tn.gov.in/ என்ற இணையத்தில் பார்வையிடவும். இதனை வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க

News December 25, 2025

ஈரோட்டில் அனைவருக்கும் ரூ.30,000 இலவசம்?

image

2025 ஆண்டு விரைவில் முடிவடைய உள்ளதால் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,000 வழங்கப்படும். இந்த உதவித் தொகைக்கான விண்ணப்ப காலம் விரைவில் முடிவடைய உள்ளதால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து உங்கள் தொகையைப் பெறுங்கள் முடியாது என வாட்ஸ் ஆப்பில் பொய்யான தகவல் பரவி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்: மேலும் இந்த லிங்கை கிளிக் செய்தால் உடனே உங்களது வாட்ஸ் அப் ஹேக் செய்யப்படும் என எச்சரிக்கை!SHAREit

error: Content is protected !!