News April 19, 2025
அசாமில் மீண்டும் நில அதிர்வு

வடகிழக்கு மாநிலமான அசாமில் இன்று காலை 7.38 மணியளவில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. பூமிக்கு கீழே 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு 25 விநாடிகள் வரை நீடித்தது. ரிக்டர் அளவில் 2.9 வரை நில அதிர்வு பதிவானதால் கட்டடங்கள் மிக லேசாக குலுங்கின. இதற்கு முன் கடந்த பிப்.27 தேதி 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 1, 2025
1.12 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனங்கள்

AI-ன் வரவால், நடப்பாண்டில் இதுவரை சர்வதேச அளவில் 1.12 லட்சம் ஊழியர்களை 218 நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளன. இதில் அதிகபட்சமாக UPS 48,000, INTEL 24,000, TCS 20,000, அமேசான் 14,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன. ஐடி, கன்சல்டிங், உற்பத்தி என பல துறை ஊழியர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். வருவாய் நிலைத்த தன்மை இல்லாததும் பணி நீக்கத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
News November 1, 2025
நீடா அம்பானியின் விலையுயர்ந்த பொருட்கள்

ரிலையன்ஸ் அறக்கட்டளைத் தலைவர் நீடா அம்பானி, தனது தன்னம்பிக்கை மற்றும் ஆற்றலால் பலருக்கும் முன்மாதிரியாக உள்ளார். கல்வி, கலை, விளையாட்டு துறைகளில் பெரும் பங்களிப்பு செய்து வருகிறார். சமூக நலப்பணிகளிலும் ஆர்வமுடன் ஈடுபடுகிறார். இன்று அவரின் பிறந்தநாள். இவர் பயன்படுத்தும் விலையுயர்ந்த சொகுசு பொருட்களின் படங்களை மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
News November 1, 2025
நகை கடன்… HAPPY NEWS

தங்கம் விலை உயர்ந்து வருவதையொட்டி, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் தொகை, கிராமுக்கு 7,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக, 1 கிராம் தங்கத்துக்கு ₹6,000 மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தங்கத்தை வங்கிகளில் அடகு வைக்கும் முன், பொதுமக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அறிய <<17712760>>இங்கே<<>> கிளிக் செய்யவும். SHARE IT.


