News April 4, 2024
அதிகாலையில் தீப்பந்தம் ஏந்தி குவிந்த பக்தர்கள்

சிவகிரியில் பழமை வாய்ந்த ஶ்ரீ பொன்காளியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். இந்நிலையில் நேற்று பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் பெண்கள் மாவிளக்கு எடுத்து பூஜை செய்து அம்மனை வழிபட்டனர். அதனைத் தொடர்ந்து நள்ளிரவில் குதிரை துள்ளல் நிகழ்ச்சியும், அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. இன்று அதிகாலை 4 மணியளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி அம்மனை வழிபட்டனர்.
Similar News
News September 16, 2025
ஈரோடு அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது!

சத்தியமங்கலம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் அம்மாசை தலைமையிலான காவல்துறையினர் ஜெய்சக்திமேடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு 4 பேர் வட்டமாக அமர்ந்து பணத்தை வைத்து சூதாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலத்தை சேர்ந்த நடராஜ், முனுசாமி, ராஜா, வேலுச்சாமி ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
News September 15, 2025
ஈரோடு: இழப்பீடு தொகை வேண்டுமா?

ஈரோடு மாவட்டத்தில் தற்பொழுது 2026 ஆம் ஆண்டு பருவத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் மக்காசோளம், துவரை, நிலக்கடலை, ராகி போன்ற பயிர்களுக்கு காப்பீடு செய்து இழப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். இதற்கு உரிய ஆவணங்களுடன் கடைசி நாளான நாளை செப்.16 மாலை 5 மணிக்குள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHAREIT
News September 15, 2025
ஈரோடு மாவட்ட காவலர்கள் இரவு நேர ரோந்து பணி விவரம்!

ஈரோடு மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் இன்று (செப். 15) இரவு ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இதன் மூலம் கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் தடுக்கப்படுகின்றன. பவானி, கோபி, சத்தியமங்கலம், ஈரோடு நகராட்சிப் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் காவல்துறையினரால் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. மேலும், கஞ்சா, புகையிலை போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையும் இதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.