News April 19, 2025
குழாய் மூலம் சமையல் எரிவாயு விநியோகம்

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு சமையல் எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு, நேற்று (ஏப்.18) தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், நாகப்பட்டினம், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் குழாய் மூலம் வீட்டு சமையல் எரிவாயு வழங்கப்படும் என தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையர் தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News August 8, 2025
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

சென்னையில் இன்று (ஆக.8) திருவொற்றியூர், ஆலந்தூர், கோடம்பாக்கம், அம்பத்தூர், மாதவரம், வளசரவாக்கம் ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <
News August 8, 2025
கிளாம்பாக்கம் வரை மெட்ரோ சேவை நீட்டிக்க பரிசீலனை

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் இன்று (ஆக.07) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னை விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க பரிசீலனை செய்து வருகிறோம். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என கூறினார்.
News August 7, 2025
JUST IN: சென்னையில் IT ஊழியர் விபரீத முடிவு

சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் இருந்து ஐடி ஊழியர் கீழே குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் குரோம்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தற்கொலைக்கான காரணம் பணிச்சுமையா? அல்லது குடும்ப பிரச்சனையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.