News April 19, 2025
கடத்தப்பட்ட தொழிலதிபர் ! சினிமா பாணியில் சேஸிங் செய்து மீட்பு…

மதுரையில் இடத் தகராறு காரணமாகக் கடத்தப்பட்ட தொழிலதிபர் கருமுத்து சுந்தரம் மீட்கப்பட்டார். பீ.பீ குளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஏப்.6 மர்மநபர்களால் கடத்தப்பட்டார். இந்நிலையில் இன்று மதுரை, பாண்டி கோயில் பாலம் அருகே போலீசார் விரட்டி பிடித்து 2 பேரைக் கைது செய்தனர். கடத்தல் தொடர்பாக ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது.
Similar News
News September 17, 2025
மதுரை – டெல்லிக்கு தினசரி விமான சேவை

மதுரை விமான நிலையத்திலிருந்து டெல்லிக்கு வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே விமான சேவை இருந்து வந்தது. இந்நிலையில் தனியார் விமான நிறுவனம் டெல்லிக்கு தினசரி விமான சேவை அளிக்க உள்ளது அதன்படி தினமும் அதிகாலை 5.15 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு அந்த விமானம் காலை 8:25 மணிக்கு மதுரை வந்தடையும், மறுமார்க்கமாக காலை 8:55 மணிக்கு புறப்பட்டு மதியம் 12:10 மணிக்கு டெல்லி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டது.
News September 17, 2025
மதுரை: மழைக்காலங்களில் இந்த எண்கள் உதவும்

மதுரை மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வரும் சமயத்தில், மரங்கள் சாய்வது, மின்கம்பிகள் அறுந்து விழுவது போன்ற இடர்பாடுகள் நடப்பது இயல்பாகியுள்ளது. ஆகவே, மதுரை மக்கள் அத்தகைய சூழலை எளிதில் அணுக அதற்கான எண்கள்:
▶️கட்டணமில்லா தொலைபேசி எண் : 1077
▶️மாவட்ட அவசர கட்டுப்பாடு அறை :0452 – 2546160
▶️வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) :98949 70066
▶️ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) : 0452 – 2533272 *SHARE IT
News September 17, 2025
மதுரை: அக்.மாத சிறப்பு ரயில்களின் விவரம்

தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மதுரை வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு வருகிற 29ஆம் தேதி மற்றும் அக்டோபர் மாதம் 6, 13, 20 ,27 ஆகிய தேதிகளில் தாம்பரத்திலிருந்து மாலை 3:30 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2:45 மணிக்கு மதுரை ர மறுநாள் அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். *ஷேர் பண்ணுங்க