News April 19, 2025

கடத்தப்பட்ட தொழிலதிபர் ! சினிமா பாணியில் சேஸிங் செய்து மீட்பு…

image

மதுரையில் இடத் தகராறு காரணமாகக் கடத்தப்பட்ட தொழிலதிபர் கருமுத்து சுந்தரம் மீட்கப்பட்டார். பீ.பீ குளத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஏப்.6 மர்மநபர்களால் கடத்தப்பட்டார். இந்நிலையில் இன்று மதுரை, பாண்டி கோயில் பாலம் அருகே போலீசார் விரட்டி பிடித்து 2 பேரைக் கைது செய்தனர். கடத்தல் தொடர்பாக ஏற்கெனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இருவர் கைது.

Similar News

News November 7, 2025

மதுரை: ரேஷன் அட்டையில் குறைகளை தீர்க்க நாளை முகாம்

image

மதுரை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சேவைகள் தொடர்பான குறைதீர்க்கும் முகாம், நவம்பர் 8-ஆம் தேதி நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. குடிமைப் பொருள் வட்டாட்சியர் மற்றும் வட்ட வழங்கல் அலுவலங்களில் நடைபெறும் இந்த முகாமில், புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தல், பெயர் சேர்த்தல்/நீக்கல்/திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பிற குறைகள் தொடர்பான மனுக்களை மக்கள் அளித்து தீர்வு பெறலாம்.

News November 7, 2025

மதுரை: எஸ்.ஐ.ஆர் படிவத்தை நிரப்புவது எப்படி?

image

வாக்காளர் பட்டியலை திருத்த எஸ்.ஐ.ஆர் (SIR) படிவம் வழங்கபடுகிறது. அதில் உங்கள் புதிய புகைப்படத்தை ஒட்டி விவரங்களான பிறந்த தேதி, ஆதார், கைபேசி எண், பெற்றோர்/துணைவர் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். 2002 வாக்காளர் பட்டியல் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டு படிவத்தில் ஒன்றை பூர்த்தி செய்து, டிச.04ம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்கவும். இத அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!

News November 7, 2025

மதுரை: பைக் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

image

சமயநல்லூர் அருகே தோடனேரியைச் சேர்ந்த விவசாயி மாயண்டி, தனது மகன் கிருஷ்ணன் உடன் பைக்கில் சென்றபோது, சமயநல்லூர் கண்மாய் கரை சாலையில் நிலைதடுமாறி பள்ளத்தில் பைக் கவிழ்ந்தது.
இவ்விபத்தில் பலத்த காயமடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த மாயண்டி, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சிறுவன் கிருஷ்ணன் லேசான காயமடைந்தார். இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

error: Content is protected !!