News April 19, 2025
தற்காலிக சத்துணவு சமையலரை கத்தியால் வெட்டிய பெண் கைது

கெலமங்கலம் அடுத்த கோவிந்தபள்ளியை சேர்ந்தவர் சரவணன் மனைவி அம்பிகா. தற்காலிக சத்துணவு சமையலராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி, தன் கணவர் சக்திவேலுவுக்கும், அம்பிகாவிற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்துள்ளார். இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த அஸ்வினி, கோவிந்தப்பள்ளி பகுதியில் வைத்து அம்பிகாவை கத்தியால் சரமாரியாக வெட்டினார். புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் அஸ்வினியை கைது செய்தனர்.
Similar News
News July 11, 2025
கிருஷ்ணகிரி விளையாட்டு வீரர்கள் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த தேசிய, சா்வதேச அளவிலான போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்று தற்போது நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரா்கள் 2025-2026ம் ஆண்டிற்கான ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை www.sdat.tn.gov.in என்ற இணைய பக்கத்தில் பதிவிறக்கம் செய்து மாவட்ட விளையாட்டு அரங்க அலுவலகத்தில் ஜூலை 31-க்குள் சமா்ப்பிக்க வேண்டும் என விளையாட்டு நல அலுவலகம் சார்பில் தெரிவிகப்பட்டுள்ளது.
News July 11, 2025
கிருஷ்ணகிரி வேலை இல்லாதோறுக்கு உதவித் தொகை

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவிதொகை வழங்கப்படுகிறது. இதில், 10th ஃபெயிலானால் மாதம் ரூ.200, 10th பாஸ்-ரூ.300, 12th பாஸ்-ரூ.400, பட்டதாரி-ரூ.600 வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.600-ரூ.1000 வரை கிடைக்கும். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்(04343-236189)(அ)<
News July 11, 2025
உதவி தொகை பெற தேவையான தகுதிகள்

இதற்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த 30 ஆம் தேதியுடன் 5 வருடத்தை நிறைவு செய்தவர்களாக இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். SC/ST-யினர் 45 வயதுக்கு மிகாமலும், BC/MBC மற்றும் இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். மேலும், குடும்ப வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். சூப்பர் திட்டம். அனைவருக்கும் பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்.