News April 19, 2025

லாரியில் சிக்கி 5 கி.மீ., இழுத்து செல்லப்பட்ட இளைஞரின் உடல்

image

மதுரை, வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ் 30. இவருக்கு மனைவி பிரியா 25, 2 மகள்கள் உள்ளனர். நேற்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து டூவீலரில் சென்றபோது ஆண்டிபட்டி பங்களா அருகே மதுரை நோக்கி சென்ற லாரியின் பின் சக்கரத்தில் மோதி டூவீலருடன் சிக்கி உடல் 5 கி.மீ. வரை இழுத்து செல்லப்பட்டது. லாரியில் உடல் சிக்கி இருப்பதை கண்ட சிலர் டூவீலரில் சென்று தகவல் தெரிவித்த பின்பு தான் டிரைவருக்கு தெரியவந்தது.

Similar News

News November 9, 2025

மதுரை சிறுவன் போக்சோவில் கைது

image

மதுரை நரிமேட்டை சேர்ந்த 15 வயது சிறுமி தனது உற­வினர் வீட்டிற்கு அடிக்­கடி சென்று வந்­துள்ளார். அப்­போது அங்கிருந்த சிறுவன் (17) அவரிடம் பழகி வந்துள்­ளார். இந்த நிலை­யில் சிறுமிக்கு உடல்­நிலை பாதிப்பு ஏற்பட அரசு மருத்­துவம­னைக்கு அழைத்­து சென்­ற­தில் அவர் 3 மாத கர்ப்­ப­ம் என தெரிந்தது. தல்­லா­கு­ளம் போலீசார் போக்சோ சட்­டத்தில் சிறுவனை இன்று கைது செய்தனர்.

News November 8, 2025

மதுரை: தலை நசுங்கி கொத்தனார் பலி.!

image

மதுரை சோழவந்தான் அருகே விக்ரமங்கலத்தைச் சேர்ந்த தெய்வம் (47) கொத்தனார். இவர் பணி முடித்து போதையில் விக்கிரமங்கலம் பஸ் ஸ்டாண்டிலேயை படுத்துவிட்டார். இந்தநிலையில் நேற்று அதிகாலை வாகனம் ஒன்று இவர் தலையில் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். தகவலறிந்து வந்து உடலை கைப்பற்றிய போலீசார் அவர் தலை மீது ஏறிய வாகனம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News November 8, 2025

மதுரை: தெப்பத்தில் தண்ணீர் நிரப்ப முடிவு

image

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பத்தை சுற்றி இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் சமீபத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தெப்பத்தில் கழிவு நீர் கலக்காமல் இருக்கவும் மாநகராட்சி மூலம் தண்ணீர் நிரப்பவும் முடிவு செய்துள்ளதாக, மதுரை வைகை நதி மக்கள் இயக்கத்தை சேர்ந்த ராஜன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விகளுக்கு அறநிலையத் துறை பதில் அளித்துள்ளது.

error: Content is protected !!