News April 19, 2025

“பொதுமக்கள் சட்ட உதவிக்கு அணுகலாம்”

image

பாளையங்கோட்டை சட்டக் கல்லூரி அரங்கில் நேற்று ஏப்ரல் 18 நடைபெற்ற மாபெரும் மரக்கன்று நடும் விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதி அரசரும் மாநில சட்டப் பணிகள் ஆணையக் குழு உறுப்பினருமான தண்டபாணி மரக்கன்றுகளை நட்டு வைத்து பேசினர். அப்போது அவர், “பொதுமக்கள் எந்த நேரமும் சட்டப்பணிகள் ஆணையக் குழுவை அணுகலாம். உங்களுக்கு உதவி செய்ய கடமைப்பட்டுள்ளோம். சட்ட ரீதியான உதவிகள் செய்ய ஆணைக் குழு தயாரக உள்ளது” என்றார்.

Similar News

News August 27, 2025

டாஸ்மாக் பாரில் 17 ஆயிரம் பணம் கொள்ளை

image

மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளம் பகுதியில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையின் அருகிலேயே டாஸ்மாக் பார் இயங்கி வருகிறது.நேற்று இரவு கடையில் விற்பனை முடிவடைந்த நிலையில் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் பாரை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை வழக்கம் போல் பாரை திறப்பதற்கு ஊழியர்கள் சென்ற போது கதவு உடைக்கப்பட்டு 17,000 ரொக்க பணம் கொள்ளை போயிருந்தது. இதுக்குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை.

News August 27, 2025

கவின் கொலை வழக்கு காணொளி காட்சி மூலம் விசாரணை

image

கவின் கொலை வழக்கில் சுர்ஜித் அவருடைய தந்தை சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் ஜெயபால் ஆகியோர் இன்று நெல்லை இரண்டாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் (தீண்டாமை தடுப்பு) ஆஜர் படுத்தப்படுவதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு கருதி 3 பேரும் வீடியோ கான்பரசிங் காணொளி காட்சி மூலம் நீதிபதி ஹேமா முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

News August 26, 2025

நெல்லை ஆம்னி பேருந்தில் அதிக கட்டணமா??

image

நாளை விநாயகர் சதுர்த்தியை கொண்டாட நெல்லை மக்களே உங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வெளியூரில் இருந்து புறபட்டு இருப்பீர்கள்! சொந்த ஊர்க்கு புறபட்ட உங்களுக்கு ஆம்னி பேருந்தின் கட்டண உயர்வு அதர்ச்சியை கொடுக்கிறதா? ஆம்னி பேருந்தின் கட்டணம் அதிகம் வசூலித்தால் 9043379664 எண்ணில் ஆதாரத்துடன் புகாரளியுங்க… (குறிப்பு: நீங்கள் சொந்த ஊரில் இருந்து வெளியூர் திரும்பும் போது இந்த எண் பயன்படும்) SHARE பண்ணுங்க!

error: Content is protected !!