News April 18, 2025
அஜித்துக்கு இம்மாத இறுதியில் பத்மபூஷண் விருது

கலை, சமூகம், மருத்துவம், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக விளங்குவோருக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. தமிழகத்தில் நடிகர் அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமிக்கு பத்மபூஷணும், கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகளை இம்மாத இறுதியில் குடியரசுத் தலைவர் வழங்குகிறார்.
Similar News
News October 31, 2025
மீண்டும் புயல் சின்னம்.. கனமழை வெளுக்கப் போகுது

மத்திய கிழக்கு வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. கடந்த வாரம் மொன்தா புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்தம் உருவாக இருப்பதால், நவ.6-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 31, 2025
TTV, OPS, KAS கூட்டு ஒரு நாள் பரபரப்பு: RB உதயகுமார்

TTV, OPS, செங்கோட்டையன் மூவரும் இணைந்து புதிய கூட்டணியை அறிவித்துள்ளனர். இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த RB உதயகுமார், அவர்கள் 3 பேரும் சேர்ந்தது ஒருநாள் பரபரப்பு என்று விமர்சித்துள்ளார். அதை கூடுதல் பரபரப்பாக்காமல் இருந்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனால் அதிமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று கூறிய அவர், இதுபோன்று நடப்பது புதிதல்ல எனக்குறிப்பிட்டார்.
News October 31, 2025
17 லட்சம் உயிர்களை காவு வாங்கிய காற்று மாசு

டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்கள் ஒவ்வொரு நாளும் தவித்து வருகின்றனர். இந்நிலையில், காற்று மாசு பலி குறித்து அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. இந்தியாவில் 2022-ம் ஆண்டில் 17.2 லட்சம் பேர் காற்று மாசுபாடு காரணமாக பலியாகியுள்ளதாக, The Lancet Countdown on Health and Climate Change அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிரிழப்பு, 2010-ம் ஆண்டிலிருந்து 38% அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.


